Thursday, June 3, 2010

மூக்கடைப்பு, தொண்டை வலி, சளி தொல்லை



குழந்தைகளுக்கு மூக்கடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது? இந்த பதிவு ஆமினாவுக்காக.

அலர்ஜி , உணவு ஓவ்வாமை, கிளைமேட் காரணமாக , ஏசி, பேன் நேர குழந்தைகளை படுக்கவைப்பதால் குழந்தைகளுக்கு முதலில் தொண்டைகட்டி, பிறகு சளி பிடித்து அடுத்து மூக்கும் அடைத்து கொள்கிறது.

இதற்கு முக்கிய காரணம் ஏசி பேன் என்பதால் அதற்கு நேரகா படுக்க வைக்க வேண்டாம்.
எப்போதும் நிமிர்ந்து படுக்க வைக்காமல் சற்று சரிந்து தலைக்கு கொஞ்சம் உயரம் வைத்து படுக்கவைக்கவும்.

மெல்லிய துணியில் ஆறிய வெண்ணீரை நனைத்து குழந்தைகளில் மூக்கை நன்கு கிளீன் பண்ணவும்.

விக்ஸ் எடுத்து கையில் குழைத்தால் எண்ணை போல் வரும் அதை லேசாக மூக்கு கிட்ட நுகர வைக்கவும்.
முக்கின் பக்கங்களில் தடவி விடவும்.
சிறிது தொண்டை பகுதி காது மடலில் எடுத்து தேய்த்து விடவும்.

மூச்சு விட கழ்டமாக இருந்தால் நடு முதுகிலும், நடு நெஞ்சிலும் லேசாக மென்மையாக தடவி விடவும்.
அதே போல் துளசி, சேர்த்து ஆவி பிடிக்கலாம், ஓமம் வ்ருத்து கசக்கிஅதை ஒரு மெல்லிய துணியில் கட்டி சின்ன குழந்தைகளுக்கு நுகர செய்யவும், பெரியவர்கள் நுகரவும் செய்யலாம், தண்ணீர் கொதிக்க வைத்து ஆவியும் பிடிக்கலாம்.



( ஆவி ஆவி என்று சொல்கிறேன் ஆவிய எங்கே போய் பிடிப்பதுன்னு கேட்கப்படாது.)


இப்படி செய்வதால் தும்மல், மூக்கடப்பு, சளிதொல்லை, தொண்டைவலி எல்லாம் போயே போச்சு , போயிண்டே.........


படுக்கும் தலையனை பெட்சிட் தினமும் மாற்றனும் , தினம் மாற்றனும் என்பது முடியாத கதை, அதற்கு தினம் வெண்ணீரில் அலசி காயவைத்து அதை விரித்து கொள்ளலாம் அல்லது தினம் மெல்லிய டவலை தலையனையில் விரித்து கொள்ளவும்.



தொண்டை வலி


தொண்டை புண்ணுக்கு தேன் குடிக்கவும்.

லேஸ் வெது வெதுபபான பாலில் இரவு தூங்கும் போது தேன் கலந்து குடிக்கவும்.


வெண்ணீரில் உப்பு போட்டு தொண்டையில் படும்படி செய்து கார்கிலிங் செய்யவும். ஒரு செம்பு அளவு போட்டு வைத்து கொண்டு அரைமணிக்கொருமுறை செய்யவும்.

(ஜுரம், சளி மூக்கடைப்பு, தொண்டைவலி, தொண்டைபுண் எல்லாத்துக்கும் எது வந்தாலும் கோல்ட் ஜுஸ் அதிகம் குடிக்காமல், காய்ச்சி ஆறிய வெண்ணீர் குடிப்பது நல்லது)



சளி தொல்லைக்கு அடிகக்டி மிளகு சேர்த்து எலும்பு சூப்,மிளகு கறி, சிக்கன், மிளகு பால், சாப்ரான் பால் குடிப்பது நல்லது, ரசம் வைக்கும் போது இஞ்சி ரசம் துளசி ரசம் என்று வைத்து சாப்பிடுவதும் கட்டுபடும்.

இதனால் வீசிங் பிராப்ளமும் கேட்கும்.

( டஸ்ட்டினால் தான் இந்த அலர்ஜி எல்லாம் வருகிறது , அபப் அப்ப தூசியை துப்புரவு செய்தாலே பாதி தொல்லைகள் தீரும், தூசி தட்டும் போது டஸ்ட் அலர்ஜி இருப்பவர்கள் மூக்கில் துணி கட்டி கொண்டு தட்டனும் இல்லை ஈரதுணி கொண்டு துடைக்கனும்.)



37 கருத்துகள்:

எல் கே said...

nalala visayangal :)

சௌந்தர் said...

இப்போதைக்கு எனக்கு தேவையான தகவல்...

நாஸியா said...

அக்கா.. மாஷா அல்லாஹ்.. உங்க நல்ல மனசுக்கு அல்லாஹ் உங்களுக்கும் உங்க குடும்பத்திற்கும் அருள் புரிவானாக. உங்க இடுகைகள் எல்லாமே எவ்வளவு பயனுள்ளதாக இருக்கு. எத்தனை பேர் நன்மை அடைவாங்க.. ஹ்ம்ம்ம்..

ஜஸகல்லாஹ் க்ஹைர். ரொம்ப ரொம்ப நன்றி!

நாஸியா said...

அக்கா.. மாஷா அல்லாஹ்.. உங்க நல்ல மனசுக்கு அல்லாஹ் உங்களுக்கும் உங்க குடும்பத்திற்கும் அருள் புரிவானாக. உங்க இடுகைகள் எல்லாமே எவ்வளவு பயனுள்ளதாக இருக்கு. எத்தனை பேர் நன்மை அடைவாங்க.. ஹ்ம்ம்ம்..

ஜஸகல்லாஹ் க்ஹைர். ரொம்ப ரொம்ப நன்றி!

Jaleela Kamal said...

நாஸியா இது நீங்கள் செய்யும் ட்துஆவுக்கே எத்தனை நல்ல பதிவு வேண்டுமானாலும் போட நான் தயார்.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

நல்ல தகவல்கள்

அருமை

Anonymous said...

அக்கா,
ரொம்ப உபயோகமான தகவல்.நன்றி.
-kr

Jaleela Kamal said...

ராஹி வாங்க ஆத்தி நலமா? இப்ப என் பிளாக் உஙக்ளால் பார்க்க முடியுதா?

வந்தது ரொம்ப சந்தோஷம்,

இது உங்களுக்கு இப்ப பயன் படும் என்று நினைக்கிறேன்.

Ahamed irshad said...

Nice tips& Useful....

Anonymous said...

மாஷால்லாஹ்,பிள்ளைகள் நலம்.
ரொம்ப நாளாக ஓபன் ஆகலைனு வருத்தப்பட்டுக்கிட்டு இருந்த வருத்தம் போயாச்சு.இது ஒரு டிரிக் செய்து ஓப்பன் செய்தேனாக்கும்.
அக்கா,குட் பிளாக்.இதை பார்க்கும் போது ரொம்ப பிரம்மிப்பாயிருக்கு.கீப் கோயிங்.ஆல் தி பெஸ்ட்.

Anonymous said...

yea,kids are fine mashallah.
Ofcourse,will be useful for my kutties...
Everyday trying to open,mmm....atlast succeeded.
Good job,keep rocking.

சிநேகிதன் அக்பர் said...

//( ஆவி ஆவி என்று சொல்கிறேன் ஆவிய எங்கே போய் பிடிப்பதுன்னு கேட்கப்படாது.)//

இது சூப்பர்.

உலகத்தில் 95% சதவீதத்தினருக்கு அலர்ஜி இருப்பதாக பேப்பரில் படித்தேன்.

உங்கள் தகவல் பயனுள்ளதாக அமைந்தது.

கவி அழகன் said...

"சத்தியமா நல்லாயிருக்கு ,,,

GEETHA ACHAL said...

நல்ல பதிவு....

Kanchana Radhakrishnan said...

நல்ல பயனுள்ள தகவல்கள்.

Chitra said...

Nice info & tips .. thnx :)

ஜெய்லானி said...
This comment has been removed by the author.
நட்புடன் ஜமால் said...

நீண்ட நாளாக எனக்கு சளி இன்னும் விட்ட பாடில்லை, இப்ப இருமல் வந்தாச்சு

----------

டிப்ஸ் அருமை.

ஆவி - ஹி ஹி ஹி

Menaga Sathia said...

பயனுள்ள தகவல்கள்!!

Riyas said...

எனக்கும் ஒரே சலித்தொல்லைதானுங்க.. தேவையான பதிவு..

ஜெய்லானி said...

வெயில் நேரத்திற்கு ஏற்ற பதிவு..!!!

Anonymous said...

It is useful for kids like me acca. Pheeeeeew. Thanks :D :D :D

vanathy said...

very useful informations. My son has cold and I am going to try your tips.

சீமான்கனி said...

ஆஹா...அருமையான தகவல் அக்கா...எல்லோரும் சொல்லுவாங்க ''பாட்டி வைத்தியம்னு'' அது எப்படி இருக்கும்னு தெரியாத என்ன மாதிரி ஆளுக்கு இனி ஜலி ''அக்கா வைத்தியம்தான்''...
நன்றி ஜலி அக்கா...

Prema said...

very very usefull tips...Easy to follow...Thanks for posting.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

எல்லாமே பயனுள்ள விஷயங்கள். ரொம்ப நன்றி.. :)

சசிகுமார் said...

பயனுள்ள பதிவு அக்கா. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Asiya Omar said...

ஜலீலா பயனுள்ள நிறைய விஷயங்கள் எழுதறீங்க.பாராட்டுக்கள்.

prabhadamu said...

akka super. kalkkuringa

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நேரத்துக்கு ஏத்த உபயோகமான பதிவு...

athira said...

ஜலீலாக்கா நான் வரக் கொஞ்சம் தாமதமாகிட்டேன்... காரணம் எனக்கும் தொண்டை நோ + மூக்கடைப்பு. அருமையான, அவசியமான குறிப்புக்கள்.

Jaleela Kamal said...

கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி
பிற்கு ஓவ்வொருத்தருக்கா பதில் போடுகிறென்

Jaleela Kamal said...

எல் கே மிக்க நன்றி

சுந்தர் உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி , எல்லோருக்கும் கண்டிப்பாக இந்த டிப்ஸ் பயன் படும்.

நன்றி நாஸியா

நன்றி உலவு.டாட் காம்

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி ராஹிலா,

நன்றி இர்ஷாத்

அக்பர் நிங்க சொன்ன மாதிரி 95% அலர்ஜியால் தான் வருது

யாதவன் உங்கல் முதல் வருகைக்கு மிக்க நன்றி

கீதா நன்றி கீதா

நன்றி காஞ்சனா
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி சித்ரா
சகோ. ஜமால் நன்றி
நன்றி மேனகா

ரியாஸ் வாங்க உங்களுக்கு இந்த டிப்ஸ் பயன் படும்/

ஜெய்லானி வெயில் நேரத்திற்கு ஏற்ற பதிவு ஆனால் இது குளிர் காலத்துக்கும் உதவும்.

அனாமிக்கா குட்டி நன்றி

Jaleela Kamal said...

வானதி இத உங்கள் குழந்தைகளுக்கு முயற்சி செய்து பாருஙக்ள்.


சீமான் கனி பாட்டி வைத்தியமும் தான் இது எல்லோருக்கும் மிகவும் பயன் படும்,/

வருகைக்கு மிக்க நன்ரி பிரேமலதா

நன்றி ஆனந்தி

நன்றி சசிகுமார்.
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி

பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி

அப்பாவி தங்கமனி உங்களுக்கும் இது மிகவும் பயன் படும் என்றால் ரொம்ப சந்தோஷம்.

அதிரா உங்களுக்கும் மூக்கடைப்பா , ஆஹா .. அப்ப சரியான நேரத்தில் தான் பதிவு போட்டு இருக்கேன்.

Unknown said...

சிசேரியன் ஆனதிலிருந்து வரட்டு இருமல் 3மாதமாக.தற்போது 1மாதமாக சளி மட்டும் வர்து.2முறை வாய் வழியே விசில் சத்தம் வந்தது.துளசி மிளகு சாப்பிடுறேன்.சளி லேசாக வெளியேறுகிறது தானாக.இது ஆஸ்த்துமா வாக இருக்குமா.என் அம்மா பனிக்காலம் வந்தா astholin tablet edupanga athanala enakum irukuma

Unknown said...

Enaku siru santhegam ungala kekalama

Jaleela Kamal said...

வரலாம். தொடர்ந்து இருமல் இருந்தால் அது அலர்ஜியாக இருக்கும்.
வெளியில் செல்லும் போது ஏற்படும் புகை மூட்டம், நெருசலில் சென்றால் கூட அலர்ஜியில் இருமல் வரும்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா