Wednesday, March 31, 2010

காணாம‌ல் போன‌வ‌ர்க‌ள் ப‌ற்றிய‌ அறிவிப்பு, அவார்டு

காணாம‌ல் போன‌வ‌ர்க‌ள் ப‌ற்றிய‌ அறிவிப்பு என்ன‌ பார்க்குறீங்க‌ த‌லைப்பு வித்தியாச‌மா இருக்கா அப்ப‌டி போட்டாதானே எல்லா வ‌ருவீங்க‌ என்று ந‌ம்ம‌ அடுத்த‌ த‌லைவி சித்ரா நேர் கோண‌ல்ன்னு போட்ட‌தால் இந்த‌ முடிவு.

பிடித்த பத்து பின்னூட்டம் தொடர் பதிவுக்கு என்னையும் அழைத்து இருந்தார்கள் ,எதை சொல்வது என்று தெரியல.

இருந்தாலும் மங்குனி அமைச்சர் போட்டுதான் ஆகனும் ஒரே தலை கீழே தொங்கிட்டு இருக்கார்.

அதுக்கு பின்னாடி சுதாகர் சார் வும் அடம் பிடிக்கிறார்.

அதை தொடர்ந்து அன்பு அதிரா, இதற்கு பிறகும் லேட் பண்ண முடியாது.


எல்லா பின்னூட்டவும் ரொம்ப புச்சது தானுங்கோய், என்னை ஊக்கம் கொடுத்து போடும் அனைவரின் பின்னூட்டமும் எனக்கு பிடித்தது தான். ஆனா இப்ப வருது பாருங்க காமடி பின்னூட்டம் அது ம்ம் சூப்பர்.

அதாங்க பின்னூட்ட குல சாமின்னு எல்லோரும் போட்டதே போடமா. பின்னூட்டம் கொடுத்து காணமல் போனவ்ர்கள் கொடுத்த பின்னுட்டத்த போடலாமே என்று தான் போட்டேன்.
எதை விடுப்ப‌து எதை எடுப்ப‌து எல்லா ம‌க்களும் பின்னூட்ட‌ம் சூப்ப‌ர் த‌ம் பிரியாணி + பூஸ்ட்+டானிக்.

நானும் ஆறு மாத காலமாக பிரியாணி கடைய பல பிராஞ்ச் ஆரம்பிச்சு பார்த்து கொண்டு இருந்தால் கூட்டமே சேரல (பின்னூட்டமே) ரொம்ப கம்மி தான். மனவருத்தம்.
இப்படி தான் சொல்லனுமுன்னு நாஞ்சிலார் சொன்னார்,

அப்ப‌ தான் வ‌ந்தாங்க‌ ந‌ம்ம‌ ஆலின் ஆல் சுஹைனா, முத்தான‌ முத்துன்னு ஒரு பேர‌ போட்டு எல்லா க‌டையையும் ஒன்றாக‌ சேர்த்து ஆலின் ஆலுன்னு பேரையும் வைச்சாங்க‌, க‌ட‌ திற‌ந்து எப்போ நோன்பில், செம்ம‌ கூட்ட‌ம்.
ஒரே ச‌ந்தோஷ‌ம் தாங்க.(சுஹைனா விற்கு நன்றி ஆனால் அதற்கு பிறகு தொடர்பு கொள்ள முடியவில்லை, தப்பா நினைக்க வேண்டாம் சுஹைனா)
அதுவும் முத்தான முத்தில் முத‌ல் ப‌திவான‌ நோன்பு கால‌ ச‌மைய‌ல் டிப்ஸ‌



SUMAZLA/சுமஜ்லா said...
குபூஸ் என்ற பேரை கேட்டாலே எனக்கு ஹஜ் ஞாபகம் தான் வருது!

அதே போல் இப்ப‌ ச‌மைய‌ல் அட்ட‌காச‌முன்னு பேர‌ வைக்க‌ சொன்ன‌ ம‌லிக்காவுக்கு ஒரு பெரிய‌ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ




1. என் பதிவுகளை தொடர்ந்து பார்த்து பின்னுட்டம் இடும் சகோ. நவாஸ் சொன்னார் (ம‌ன‌ விசால‌ம்) ப‌தில் போட்டாலும், ஒரு ப‌திவில் ஊருக்கு போறேன் ,
"நான் ஊருக்கு போன‌தும் பொட்டிய‌ திற‌க்கிறேனோ இல்லையோ முத‌லில் உங்க‌ சைட்ட‌ ஓப்ப‌ன் செய்து எங்க‌ த‌ங்க‌ம‌ணிக்கிட்ட‌ காட்ட‌னும்" என்றார். இவர் காணாம போகல ஊருக்கு போய் இருக்கார்
ச‌கோ. ந‌வாஸ் த‌மிலிழில் சம்மிட் செய்து ஓட்டு கிடைச்சுது பாருங்க‌, நெச‌மாவே ஒரு தொகுதியில‌ நின்னு ஜெயிச்ச‌ எஃப‌க்ட் வ‌ந்துடுச்சி


2. தாஜ் said... சலாம் ஜலீலாமுத்தான துவாக்கள் தருவீக
நீங்க நல்ல சமையல் குறிப்பு தருவீக
சூப்பர் டிப்ஸ் தருவிக
குழந்தை வளர்ப்பு பற்றி சொல்லுவீக
என்று மட்டும்தானே நினைத்தேன்
அடி ஆத்தி இம்புட்டு அழகா
எழுதுறீகளே[பேசுறீகளே]
தாங்கள் மென் மேலும் வாழ்க வளர்க
சூப்பர் டூப்பர் குறிப்புகளை தருக
நான் தாயாய் ஒரு நேரம் தவித்த பொழுது உங்கள் குறிப்பு எனக்கு மிகவும் உத்வியிருக்கு நன்றி


3. குறை ஒன்றும் இல்லை !!! said...
நல்லா இருக்கும் போல இருக்குங்க..
ஆமா இந்த வடை சாப்பிட்டா பாப்பாய்(popeye)மாதிறி பலம் வருமாங்க
குறை ஒன்றும் இல்லை said... ஏங்க அப்படியே வலையில மாட்டாம இருக்க மீனுக்கும் கொஞ்சம் டிப்ஸ் குடுத்தா நல்லா இருக்கும்
(ராஜ் குமார், அமைச்சரே நான் தான் காமடி ரொம்ப ஆடப்படாது, உங்களுக்கு முன் டைடல் பார்க்கில் உட்கார்ந்து யோசித்து யோசித்து கவுண்டர் காமடி போட்டது இவர்தான்)

4. சிங்கக்குட்டி said... இந்த அட்டகாசம் அருமையாக இருக்கிறது ஜலீலா :-

சிங்கக்குட்டி said... புதுவருட வாழ்த்துகளுடன் உங்களுக்கு என் சிறிய பரிசு :-)
http://singakkutti.blogspot.com/2009/12/blog-post_25.htmல்

பல பின்னூட்டம் கொடுத்துள்ளார் சரியாக என்னால் எடுக்க முடியல ஆனால் இவர் பதிவுகள் நம்ம அண்ணாமலையார் பதிவு போல் நல்ல விளக்கமா, பெரிய பதிவா இருக்கும்.


5. டவுசர் பாண்டி has left a new comment on your post "கரம் மசாலா சாக்லேட் ந‌ட்ஸ் கேக் - garam masala cho...": நம்ப நெலம தெரிமா ? அண்ணாத்தைக்கி இன்னா ஆச்சி இன்னு ஒரு வார்த்த கேட்டியா இன்னா தங்கச்சி !! நேத்து பதிவு பக்கமே காணோமே இன்னு பாத்தா !! இந்த கேக்கு சென்சி ஜெயிச்சிட்டீங்க போல கீது , அதான் நம்ப ஏரியாவுக்கு வரல !! டவுசர் பாண்டி said... இந்த குப்பத்துல கீர என்னையும் மச்சி , விருது குட்த சகோதரி ஜலீலா , உங்களுக்கு ரொம்பவே டான்க்சுங்கோ !! நம்ப கூட விருது வாங்கிக் கீன அல்லா தோஸ்துக்கும், வாழ்த்துக்கள்

(எல்லாரும் என்ன அக்கா அக்கான்னு கூப்பிடுறாங்க , நம்ம பாண்டி அண்ணாத்த தான் உரிமையோட தங்காச்சி தங்காச்சின்னு கூப்புடுவாரு, ஆனா என்ன சோகமோ பிரில அண்ணாத்தைய ரொம்ப நாளா காணல... )

8 . shirdi.saidasan@gmail.com said... உங்க விருது ஸ்பெஷல். ஏற்றுக்கொள்கிறேன்.நீங்க நல்லா சமைக்கிறீங்களே. ஒரு வேளை உங்கள் சமையலை சாப்பிட்டு பார்க்கனும். ஓட்டல் ஏதாவது நடத்துகிறீர்களா?
(முதலில் பாலோவர் ஆனவர், ரொம்ப நாளா அவர் குறிப்ப படிக்க முடியாம தேடிட்டு இருந்தேன். பிறகு ஒரு வழியா கண்டு பிடிச்சு நேரம் கிடைக்கும் போது போய் பின்னூட்டமிடுவது)

9. கமலா said... குறிப்பும், படமும் அருமையாக உள்ளது. இதுவரை கொண்டைக்கடலையில் வடை (பிலாபில்) செய்ததில்லை. இதை செய்துப் பார்க்க வேண்டும்.
அன்புடன் கமலா

10. கருவாச்சி said... ஜலி அக்கா மணப்பாறை முர்க்கு மேரி சும்மா மொரு மொருநு கீதுக்கா(இவருடையது நிறைய பின்னூட்டம் இருக்கு என்னால் தேட முடியல)

11. Dr.எம்.கே.முருகானந்தன் said...
குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட உங்கள் பதிவு மிகச் சிறப்பாக இருக்கிறது.
பல பெற்றோர்கள் இவற்றைப் புரிந்து கொள்ளாமல் குழந்தைகளைத் தவறாக வழிநடத்துவதை நான் பல முறை காண நேர்ந்திருக்கிறது
(ஹை டாக்டரே வந்து பின்னூட்டம் போட்டுட்டாரா , ஒரே சந்தோஷம். )


//பதிவு திருட்டின் போது ஆதரவாக எத்தனையோ நல்ல உள்ளங்கள் போட்ட பின்னூட்டத்தில் .//


(நட்புடன் ஜமால் said...
வருத்தமாகத்தான் இருக்கு.எங்கெல்லாம் காப்பி அடிச்சாங்கன்னு உங்ககிட்ட சுட்டிகள் இருந்தா குடுங்க - எதுனா செய்ய இயலுமா என்று பார்க்கலாம்.மனம் தளராமல் - உங்கள் குறிப்புகளை வெளியிடுங்கள்.
இப்ப உள்ள கொஞ்சம் வெட்டி பேச்சு சித்ரா போல் பதிவுலகை கலக்கியவர் நட்புடன் ஜமால், மீண்டும் அவருடைய பயனுள்ள பதிவுகளை எதிர் பார்க்கிறேன் முன்பு போல் அவர் கலக்கலான பதிவுகள் தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்


பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
ஜலீலா அவர்குளுக்கு,
உங்கள் பதிவை யார் திருடினார்களோ அவர்களின் முகவரியை இங்கே தெரிவியுங்கள்.. நாங்கள் அதைப் பார்ப்பதைத் தவிர்த்து விடுவோம்.. தக்க பாடத்தையும் பின்னூட்டங்கள் மூலம் தெரிவிப்போம். அவர்கள் தவறை நினைத்து வருந்த வேண்டும்.. உங்கள் பெயரை கடைசியில் போட்டு நன்றி தெரிவிக்கும் ஒரு நாகரிகமாவது வரட்டும் அவர்களுக்கு.
..என்ன நண்பர்களே..
நன்றி...

//மிக்க நன்றி சகோதரர்களே //

உங்கள் பதிவில் (சாமகொடங்கி பிரகாஷ்)என்னால் பின்னூட்டம் இட முடியவில்லை ஆகையால் இங்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்,
நட்புடன் ஜமால் நன்றி
இப்படி உற்சாகமாக எல்லோரும் பின்னூட்டம் கொடுத்ததில் , இந்த இரண்டு பின்னூட்டம் ரொம்ப தெளிச்சளாகவும், தைரியமாகவும் இருந்தது//


ஹைஷ்126 said... அன்பு சகோதரி ஜலீலா, எதிர்பார்ததைவிட நன்றாகவே வந்தது. வரும் 15 டிசம்பரில் சரியாக ஒரு வருடம் ஆகப் போகிறதே (சமையல் கற்று). அருமையான சுவை. மிகவும் நன்றி.
வாழ்க வளமுடன்
(என் சமையலை செய்து பார்த்து வந்து பின்னூட்டம் இட்ட சகோ.ஹைஷ், விமானம் ஓட்டுபவர்)





சிங்ககக்குட்டி கொடுத்த மைக்கேல் ஜாக்ஸனில் கூல் பிளாக் அவார்டை புத்தாண்டில் கொடுத்தது.





1. ஜெய்லானி
2.மங்குனி அமைச்சர்
3. ஸ்டார்ஜன்
4. பனித்துளி சங்கர்
5. அக்பர் சினேகிதன்
6. அன்புத்தோழன்
7. ரோஸ்விக்
ஆகியோருக்கு கொடுக்கிறேன், பெற்று கொள்ளுங்கள்



டிஸ்கி: அமைச்சர் கூப்பிட்ட தொடர் பதிவ போட்டாச்சு போதுமா .நாஸியா கூப்பிட்ட தொடர் பதிவு தான் இன்னும் போடல.

எனக்கு உற்சாகம் தரும் பழைய புதிய பதிவர்களுக்கும், இப்ப நகைச்சுவையா போட்டு சிரிக்கவைத்து கொண்டிருப்பவர்களுக்கும் மிக்க நன்றி.

Tuesday, March 30, 2010

வாங்க கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்




மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?தெரியலையா?



அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை படைச்சே?



எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க?
ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்


தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.



தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?
மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!


டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா?
சார். மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!



யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது?
கடிகாரத்தில் பேட்டரியை எடுத்துவிட்டுப் பாருங்கள்! டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். தின்க் டிபறேன்ட்லி!!



இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!


ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?
நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொல்லி போடணும்!போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொல்லி வச்சுரவா?



பஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்!
பீட் ரூட்ல என்ன போகும்?


தெரிஞ்சா எனக்கு SMS பண்ணுங்க!



அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?
சரோஜா! ஏன் கேக்குற?
அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?


பல்ப் - எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் - க்ராஹாம்
பெல்க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!


காதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல!ஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும்! தோல்வியே எவ்வளவோ


பரவாயில்லை என்று!!


அதிக நேரம் உன் அழகை கண்ணாடியில் பார்க்காதே!உன் அழகைப் பார்த்து கண்ணாடிக்கும் உன் மேல் காதல் வரும்!!


மூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க!
அப்ப ஒரு டிராபிக் போலீஸ்
கை காட்டி நிறுத்தசொல்றாரு!
அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா
"யோவ்! ஏற்கனவே மூணு பேரு
உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று
கேட்டான். இது எப்படி இருக்கு?



டாக்டர்: உங்க உடம்ப குறைக்க தினமும் நான்கு மைல் நடக்கணும்!
பேசன்ட்: சரி டாக்டர்! நாளைக்கே நான்கு மயில் வாங்கி நடக்க வைக்கிறேன்!!



ஹலோ! என்னதான் கம்ப்யூட்டர் விண்டோவ்லா உலகமே தெரிஞ்சாலும் எதிர் வீட்டுபொண்ணு தெரியுமா?


----- பில் கேட்ஸ் ஐ விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.


அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி?மகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே ஓடி போய்டாங்க!!


கொடூர மொக்கை!
என்னதான் நான் அனுப்புற
மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும்,
உங்க மொபைல்'ல வரும் பொது
"ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு" என்றுதான் வரும்!! எப்பூடி...


எல்லாரும் மொக்க, கவுஜ ந்னு போடுறாங்க மொக்கை பதிவு ந்னா என்னா,கவுஜ நா என்னா அது எனக்கு புரியவே இல்ல‌ அத நம்ம மொக்க பதிவா,(கவிதையா) போடும் நாஞ்சிலார் கிட்ட கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
டிஸ்கி, முஸ்கி (இதென்ன அமைச்சர் மாதிரிவருது):

மெயிலில் வ‌ந்த‌ மொக்கை.

Monday, March 29, 2010

எட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே











வெளி நாடுகளில் தனியாக வாழும் கர்பிணி பெண்களுக்கு எனக்கு தெரிந்த சில பதிவுகள். -- முதலில் 4 மாதம் வரை ஒன்றும் சாப்பாடு இறங்காது எத பார்த்தாலும் வாந்தி வரும் கிச்சனை பார்த்தாலே கொமட்டும்.
லைட்டான உணவா எடுத்து கொள்ளலாம்.
ஜூஸ் வகைகள் பழங்கள் நிறைய சாப்பிடலாம். புளிப்பு சுவையுடைய குழம்பு வகைகள் வாய்க்கு ருசிபடும். எத சாப்பிட்டாலும் வாமிட் வருதுன்னு சாப்பிட பயந்து ஒன்றும் சாப்பிடாமல் இருப்பது கேஸ் டிரபுள் வந்து, தெம்பிழந்து. குளுக்கோஸ் ஏற்றும் நிலையில் கொண்டு போய் விடும்.
முதலில் இருந்தே எப்போதும் ஆரஞ்சு ஜூஸ், லெமன் ஜூஸில் கொஞ்சம் குளுக்கோஸ்,ஒரு பின்ச் உப்பு போட்டு குடிக்கலாம். இது நல்ல எனர்ஜி மயக்கத்தை கேட்கும்.மாதுளை பழம் வாய்க்கு ருசி படும், வாய் கசப்பிற்கு ஆல் பகடாவை வாங்கி வயில் அடக்கி கொள்ளலாம்.

அதிக வெயிட் தூக்க கூடாது வேக மாக மாடிப்பறி ஏறி இரங்கக்கூடாது.
4 ஆம் மாதம் வாந்தி நின்று கொஞ்சம் தெளிச்சல் ஏற்படும், அப்போது நல்ல இரும்பு சத்துள்ள காய் கறிகள், முக்கியமாக புரோக்கோலி மிகுந்த இரும்பு சத்துடையது. புரோகோலி சூப் மற்றும் புரோக்கோலி மட்டன் வறுவல் சாப்பிட்லாம். 4 லிருந்து 6 மாதம் வரை நல்ல சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.இருப்பு சத்துள்ள உணவு எடுப்பதால் டெலிவரி சமையத்தில் குறையும் ஹிமோகுளோபின் அளவை சரியாக வைத்து கொள்ளலாம்.


ம‌ன்ப‌த்தையில் ஆட்டு பார்ட்சில் ஒன்றான‌ ம‌ண்ப‌த்தையில் அதிக‌ இரும்பு ச‌த்து உள்ள‌து அதை மிள‌கு இஞ்சி பூண்டு சேர்த்து சுட்டு சாப்பிட‌லாம்.
சில‌ர் எண்ணை அதிக‌முள்ள‌ அயிட்ட‌ம் எடுக்க‌ வேண்டாம் என்று ட‌ய‌ட் செய்ப‌வ‌ர்க‌ள் சாப்பிடும் எண்ணையில்லா ச‌ப்பாத்தியை க‌ர்பிணிக‌ள் உட்கொள்ள‌ வேண்டாம்.

நெல்லிக்காய் அவித்து அதில் உப்பு ஊறுகாய் அல்ல‌து தேன்,ச‌ர்க‌க்ரை பாகு, வெல்ல‌ப்பாகில் ஊற‌வைத்து சாப்பிட‌லாம்.
ஒன்றும் பிடிக்க‌லைன்னு சில‌ர் வெரும் த‌யிர் ம‌ட்டும் போட்டு சாப்பிடுவார்க‌ள்.ஓர‌ள‌விற்கு தான் சேர்த்து கொள்ள‌னும், அதிக‌ புளிப்பு அயிட்ட‌ம் ச‌ப்பிடுவ‌தால் க‌ர்ப‌த்திலேயே குழ‌ந்தைக‌ளுக்கு ச‌ளி ஏற்ப‌டுகிற‌து,


இது குழ‌ந்தை பிற‌ந்த‌தும் ரொம்ப‌ ச‌ளியா இருக்குன்னு உட‌னே ஆன்டிப‌யாட்டிக்க‌ கொடுப்பாங்க‌, வெரும் தாய்ப்பால் குடிக்கும் குழ‌ந்தைக்கு எப்ப‌டி ச‌ளி பிடிக்கும், க‌ர்பிணிக‌ள் க‌ர்ப‌ கால‌ததிலும், பிள்ளை பெற்ற‌தும் சாப்பிடும் உண‌வு ச‌ரியான‌தாக‌ இருக்க‌வேண்டும்.
சில‌ருக்கு எதுவுமே பிடிக்க‌லையின்னு ஊற‌வைத்த‌ அரிசி, புட்ட‌ரிசி மாவை அள்ளி சாப்பிடுவார்க‌ள் அது இர‌த்த‌ சோகை ஏற்ப‌டும், குழ‌ந்தையின் த‌லையில் மாவு போல் ஒட்டி கொண்டு பிள்ளை பெறும் நேர‌த்தில் மிக‌வும் சிர‌ம‌ம் ஆகிவிடும்.


இரத்த சோகைக்கு சுவரொட்டி என்னும் மண்பத்தை ஆட்டு பாட்ஸில் ஒன்று இதை கர்பிணி பெண்கள் கர்பகாலத்தில் வாரம் முன்று முறை சாப்பிட்டால் ஹிமோ குளோபின் அள்வு அதிகரிக்கும்.


பாயிஜாவின் சுவரொட்டி பிரையை பார்க்கவும்.


கிட்னி பிரை, ஈரல் கூட்டு இதையும் கர்பிணிகள் அடிக்கடி சாப்பிடாலாம். ஹெல்த் மற்றும் அயர்ன் டானிக்கு பதில் இந்த பக்க உணவை சேர்த்து கொள்ளலாம்.


தங்கைக்கு ஹிமோகுளோபின் அள்வு 6 ஆக குறைந்து விட்டது , ஓரளவிற்கு இதெல்லாம் செய்து கொடுத்து கரெக்டாக பிள்ளை பெறும் நேரத்தில் 10 க்கு கொண்டு வந்தாச்சு, டாக்க்டருக்கே ஆச்சரியம்.
சரியாக ஓவ்வொருவருக்கும் அவர்களுடைய ஹிமோகுளோபின் அளவு 12 இருக்கனும். நம் நாட்டு பெண்கள் அதிக உழைப்பாளிகள் 10 க்கு மேல் ஏர சான்ஸ் இல்லை

7 மாதத்தில் சில பேருக்கு கால் பொத பொத வென பன் மாதிரி வீங்கும், அது கர்ப காலத்தில் வரும் பிரஷரினால் வருவது.
அதற்கு உப்பு சிறிது கம்மியா போட்டு சமைத்து சாப்பிட்டால் போதுமானது.
கால் வீக்கத்துக்கு பார்லி வேக வைத்த தண்ணீர் குடிக்கனும், வெரும் பார்லிய ஊறவைத்து அதை வேகவைத்து வடிகட்டிய தண்ணீர் இது போல நிறையதினம் இரண்டு டம்ளர் அளவிற்கு குடிக்கலாம்
தினம் பார்லி தண்ணீர் குடிக்க முடியாது.
பார்லி காய்கறிகள் எல்லாம் மொத்தமாக வேக வைத்த சூப் செய்து குடிக்கலாம்.


பார்லி அடை கூட சாப்பிடாலாம், சாதா பருப்படை போல் அதில் பார்லியும் கலந்து ஊறவைத்து அரைத்து சுட்டு சாப்பிடலாம்.பார்லி குறிப்புகள் நிறைய மேனகா, கீதா ஆச்சல் பதிவுகளில் இருக்கு, அதை சென்று பார்க்கவும். என் தங்கைக்கு அப்படி தான் செய்து கொடுத்தேன்.காலை கீழே தொங்க போட்டு உட்கார வேண்டாம் வீக்கம் குறையாது.
பெட்டில் உட்காரரும் போதும் காலை நல்ல நீட்டி உட்காரனும்.சேரில் சோபாவில் உட்காரும் போது காலுக்கு ஒரு சின்ன ஸ்டூல் போட்டு உட்காரவும்.தூங்க்ரொம்ப நேரம் நிற்க ,நடக்க வேண்டாம்..

முக்கிய‌மாக ப‌டுக்கும் போது ம‌ல்லாக்க‌ ப‌டுக்க‌க்கூடாது ஏதாவ‌து ஒரு புற‌ம் ச‌ரிந்து வ‌யிற்று ப‌க்க‌ம் ஒரு த‌லைய‌ணையும் இர‌ண்டு காலுக்கிடையில் ஒரு த‌லைய‌னைவைத்து ப‌டுப்ப‌து ந‌ல்ல‌து.குழ‌ந்தைக‌ள் அதிக‌ம் உள்ள‌ வீட்டில், எதிரில் வ‌ந்து இடித்து விட‌ வாய்பிருக்கு எப்போதும் நடக்கும் போது நிற்கும் போது இர‌ண்டு கைக‌ளையும் வ‌யிற்றுக்கு முன்புற‌ம் வைத்து கொள்வ‌து ந‌ல்ல‌து.அதே போல் சோபா சேரில் உட்காரும் போது வ‌யிற்றின் முன் ஒரு சிறிய‌ த‌லைய‌னை வைத்து கொள்ள‌வேண்டும்.

இரவு தூங்க போகும் போது வெது வெதுப்பான வெண்ணீரில் காலை சிறிது நேரம் வைக்கவும்ஹை ஹீல்ஸ் போடக்கூடாது, சாதராண ஷாப்ட்டான செருப்பை பயன் படுத்தவும்.
ஏழாம் மாதத்திலிருந்து தினம் இரவில் பாலை நன்கு காய்ச்சி, அதில் இரண்டு இதழ் குங்குமப்பூ உரைத்து சேர்த்து கலந்து குடிக்கவும். இது கர்பிணிகளுக்கும்,கர்ப காலத்தில் குழந்தைகளுக்கு சேரும் சளியையும் கட்டுப்படுத்தும், பாட்டிமார்கள் அந்த காலத்தில் ஒழுகாக சாப்ரான் பால் குடிக்கனுமே என்று இதை குடித்தால் குழந்தை நல்ல கலராக பிறக்கும் என்று கட்டி விட்டதால் இன்னும் எல்லோரும் குங்குமப்பூ (சாப்ரான்) பால் குடித்தால் குழந்தை சிகப்பாக பிறக்க்கும் என்ற எண்ணம் தான் எல்லார் மனதிலும் இருக்கு.(இது சாதாரனாமாக நாமும் சாப்ரான் பால் சளிக்கு குடிக்கலாம்) நான்ன் பிள்ளைகளுக்கு அடிக்கடி கொடுக்கிறேன்.

எட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே என்பார்கள் அந்த கால பாட்டி மார்கள்.
எட்டுமாதத்தில் கர்பிணி பெண்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும், மாடிப்படி இரங்கும் போது, பாத்ரூம் கழுவும் போது , பாத்ரூமிற்குள் நுழையும் போது பார்த்து போக‌னும் சோப்பு நுரை ஏதும் இருந்தால் வ‌ழுக்கி விடும்.இப்ப‌ எல்லா வீடுக‌ளிலும் டைல்ஸ் தான் வீடு துடைத்து இருந்த‌ இட‌த்தில் கொஞ்ச‌மா த‌ண்ணீர் இருந்தாலும் வ‌ழுக்கி ஆப‌த்தை எற்ப‌டுத்தும்.எதாவது பொருட்கள் உயரத்தில் இருந்தால் அதை கிட்ட தானே இருக்கு என்று முயற்சிக்க வேண்டாம், கண்டிப்பாக கீழே விழ சான்ஸ் இருக்கு.



//இப்படி தான் ஒரு வீட்டு பங்க்ஷனில் எட்டு மாத கர்பிணி பெண் டீ போடும் போது இவங்க கீழே உட்கார்ந்து பங்க்ஷன் என்பதால் பெரிய குடம் நிறைய டீ, வடிகட்டியை பிடிக்க, எதிரில் நின்று பெரிய பானையோடு டீயை ஊற்றும் போது கை தவறி அந்த பெண்ணின் வயிற்றில் விழுது பிள்ளை தாச்சிக்கு டீ குளியல் அவள் துடித்து போனால். தோலெல்லாம் உறிந்து அந்த குழ்ந்தை ய பெற்றுடுக்கும் கஷ்டத்துடன் இந்த புண்களோடும் வயிற்றிலிருந்து கால் முழுவதும் கொப்புளங்கள்.அத்துடன் அந்த குழந்தையை பெற்றெடுத்தாள். , எத்தனை கழ்டம் அந்த பெண்ணிற்கு.குழந்தையும் நார்மல் டெலிவரி கிடையாது சிசேரியன் (இது எங்க குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவம்)//


9 மாதம் நல்ல நடை பயிற்சி செய்யுங்கள்.சுக்கு பால், பூண்டு பால், உளுவா கஞ்சி , சோம்பு தண்ணி, முட்டை மிளகு சோறு இதை சாப்பிடால் வாயு கலைந்து சுகப்பிரசம் ஆகும்.
ஒன்பதாம் மாதம் வெது வெதுப்பான வெண்ணீரை இடுப்பில் தினம் ஊற்றவேண்டும்.


கர்பகாலத்தில் மற்றசிந்தனைகள் மற்ற பிரச்சனைகளை மனதில் போடமால் குழ்ந்தைய நல்ல படியாக பெற்றெடுக்கும் நினைவோடு மட்டும் இருங்கள்.
என்னேரமும் திக்ரு , மொழிந்த வண்ணம் இருக்கங்கள். தொழுகை வணக்கங்களில் மனதை செலுத்தவும். நல்ல இனிமையான இசையை கேளுங்கள். அதிரடியான படங்களை பார்க்க வேண்டாம்.


எனக்கு தெரிந்ததை எழுதி இருக்கிறேன், இது தாயகப்போகும் கர்பிணிகளுக்கு பயன் படும் என்று நினைக்கிறேன்.


பிறகு என்ன சுகப்பிரசவ்ம் தான். குழந்தை கையில் வந்து விட்டால் அவர்களை வளர்பதே பெரிய பாக்கியாமாக நாட்கள் சுவரஸியமாக நகரும்.



ஸாதிகா அக்காவில் இந்த அறிவான சந்ததிகளையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.அதோடு, இதில் நான் குழந்தை வளர்பு டிப்ஸ்+குழந்தை உணவையும் போட்டுள்ளேன். ஒவ்வொன்றாக கிளிக் செய்து பார்த்து கொள்ளலாம்.


Saturday, March 27, 2010

என‌க்கு பிடித்த‌ டீவி நிக‌ழ்ச்சியும் அவார்டும்




1. சீமான் கனி அழைத்ததால் இந்த பதிவு. நேரமில்லாததால் லேட்டா போட்டு இருக்கேன்.



எனக்கு ரொம்ப பிடித்த டீவி நிகழ்சி காமடி தான், எப்போதும் காமடி காமடி மட்டும் தான் பிடிக்கும்.










இதான் நம்ம மங்குனி அமைச்சர், வடிவேலு மாதிரியே ரொம்ப நல்லவர், எவ்வளவு அடி கொடுத்தாலும் தாங்கிக்கொள்வார்.ஜெய்லானி கிட்டேயும், பட்டாபட்டி கிட்டேயும் அடி படவே பிறந்தவர்.
அழமா சிரிப்பர் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஜெய்லானி கிட்டேயும், பட்டாபட்டி கிட்டேயும் அடி படவே பிறந்தவர்












.லொஜக் மொஜக், எதையும் ப்ப்ப்பிளான் பண்ணி தான் செய்யனும் ஒகேக்க்க்கே










வடி வேலு காமடிகள் தான் ரொம்ப விரும்பி பார்ப்பது,
வடிவேலுவின் ஓவ்வொரு காமடியும் கலக்கல் தான் யாரையும் சார்ந்ததாக இருக்காது.




மற்ற காமடிகளும் எல்லாமே பிடிக்கும்.


2. ஓவ்வொரு முறையும் மேனகா‌ அவார்டு கொடுப்ப‌தில் என்னை ம‌ற‌ப்ப‌த்தில்லை, மேன‌கா கொடுத்த‌ இந்த‌ அவார்டை பெண் ப‌திவ‌ர்க‌ளுக்கு கொடுக்கிறேன். மேனகாவும், அம்முவும் கொடுத்தது. இருவருக்கும் மிக்க நன்றி + சந்தோஷம்/


ஓவ்வொரு முறையும் மேனகா‌ அவார்டு கொடுப்ப‌தில் என்னை ம‌ற‌ப்ப‌த்தில்லை, மேன‌கா கொடுத்த‌ இந்த‌ அவார்டை பெண் ப‌திவ‌ர்க‌ளுக்கு கொடுக்கிறேன்.
ஜெய்லானி, அம்மு மது ,மேனகா முன்று பேரும் இந்த சன்ஷைன் அவார்டு கொடுத்து இருக்கிறார்கள். ஜெய்லானி நல்ல பயனுள்ள பல தகவலுடன், பதிவுகளை பகிர்ந்து கொண்டு இருக்கிறார். அம்மு மது வெஜ் உணவை வித விதமாக செய்து பரிமாறும் முறை அருமை. மூவருக்கும் மிக்க நன்றி.

இதை யாருக்கு கொடுப்பது என்று தெரியல. எல்லோரும் இந்த அவார்டை வாங்கியாச்சு. இருந்தாலும் நான் கொடுக்க நினைத்தவர்கள். பூ என்பதால் பெண் ப‌திவ‌ர்க‌ளுக்கு இதை கொடுக்கிறேன்.

இலா = நான் சோர்ந்து போன‌ போது என்னை உற்சாகப்படுத்தி பிளாக் ஆர‌ம்ப்பிக்க‌ சொன்ன‌ அன்பு த‌ங்கை.





அதிரா = வை என‌க்கு ரொம்ப‌ பிடிக்கும் அதிராவின் இல‌ங்கை த‌மிழில் க‌தைப்ப‌து ரொம்ப‌ பிடிக்கும்.இவங்க எழுத்தில் மிகுந்த ஆழமும் உருக்கமும் இருக்கும்






விஜி = தோழி போல‌ ஜ‌லீ ஜ‌லீ என்று உரிமையோடு கூப்பிடுவாங்க‌.





ஆசியா = ச‌மைத்து அச‌த்தாலாம் எப்போதும் பாராட்டுட‌ன் கூடிய‌ பின்னூட்ட‌ம் நானும் ஆசியா எப்ப‌ பிளாக் ஆர‌ம்பிப்பாங்க‌ அவார்டு






சித்ரா = கொஞ்ச‌ம் வெட்டி பேச்சு அப்பாவை பிரிந்து ம‌ன‌முடைந்து இருந்த‌ சித்ராவை எப்ப‌டியாவ‌து ஆறுத‌ல் கொடுத்து அவ‌ங‌க் எழுத்துக்க‌ளுக்கு ஊக்க‌ம் கொடுக்க‌னும் என்று நான்கு மாதங்கள் முன்பு முன்பு அவார்டு கொடுத்தேன், இப்ப‌ ப‌திவுல‌கில் ந‌ம்ப‌ர் ஒன் சித்ரா, ந‌ல்ல‌ ப‌திவுக‌ளுட‌ன் ப‌திவ‌ர்க‌ள‌ அனை வ‌ருக்கும் பிடித்த‌ ந‌கைச்சுவையுட‌ன் உள்ள‌து அவங்க பதிவு.






ஸாதிகா அக்கா = த‌ங்கை ஜ‌லீ என்றே உரிமையுட‌ன் அவ‌ர்க‌ள் என்னை அழைப்ப‌து ரொம்ப‌ பிடித்துள்ள‌து.


தேனக்கா எல்லத்திலும் கலக்கல். மருதாணி செடிக்கு கூட கலக்கலாக அழகான கவிதை எழுதியிருக்கங்க/



பிர‌பா = ஆழ்க‌ட‌ல் க‌ள‌ஞ்சிய‌ம் = எங்கும் என்னை தேடி என்னை விசாரிக்கும் பிர‌பா

செல்வி அக்கா = மலர் வனம் இப்ப தான் மலர்வனம் ஆரம்பித்துள்ளார், இனி கலக்குவாங்க‌

இமா . இமாவின் உலகம் நல்ல அன்பான ஆசிரியை


பாத்திமா ஜொஹ்ரா. அன்போடு உங்கள் அனைவரயும் அழைக்கிறாங்க. இஸ்லாமிய சிந்தனை பதிவுகள் அங்கு அருமை

பாயிஜா = ச‌க‌ல‌ க‌லா வ‌ல்லி என்று சொல்ல‌லாம். எல்லாத்திலும் க‌ல‌க்க‌ல் ப‌திவு



ம‌னோ அக்கா = ந‌ல்ல‌ அனுப‌வ‌சாலி, பைய‌னை பிரிந்து ம‌ன‌ம் நொந்து இருந்த‌ ச‌ம‌ய‌ம் அவ‌ர்க‌ள் சொன்ன‌ ஆறுத‌ல் வார்த்தைக‌ள் ரொம்ப‌ ந‌ல்ல‌ இருந்த‌து .
//யாருக்கெல்லாம் தொடருனும்முன்னு தோணுதோ அவர்கள் எல்லாம் தொடரலாம்.//

ஊட்டி ஆப்பில் ரசம் - plums rasam




பிள‌ம்ஸ் ர‌ச‌ம் , பிள‌ம்ஸ் நிறைய‌ வாங்கி அது புளிப்பாக‌ இருந்தால் சால‌ட் செய்து சாப்பிட‌லாம். ச‌த்தான‌ ர‌ச‌மும் வைக்க‌லாம். நீங்க‌ள் சொன்னால் தான் இது பிள‌ம்ஸ் ர‌ச‌ம் என்று தெரியும்.


ஊட்டி ஆப்பில் = 3
தண்ணீர் = இரண்டு டம்ளர்
புளி = சின்ன‌ கொட்டை பாக்க‌ள‌வு

தட்டி கொள்ள‌

மிளகு = அரைதேக்கரண்டி
சீரகம் = அரை தேக்கரண்டி
பூண்டு = முன்று பல்
பச்ச மிளகாய் = ஒன்று
கருவேப்பிலை = சிறிது

தாளிக்க‌

எண்ணை = ஒரு தேக்கரண்டி
க‌டுகு = அரை தேக்க‌ர‌ண்டி
க‌ருவேப்பிலை = சிறிது
பெருங்காய‌ப்பொடி = ஒரு சிட்டிக்கை
உளுத்த‌ம் ப‌ருப்பு = கால் தேக்க‌ர‌ண்டி

கொத்து ம‌ல்லி கீரை = சிறிது க‌டைசியில் தூவ‌

ஊட்டி ஆப்பிலை இர‌ண்டு ட‌ம்ள‌ர் த‌ண்ணீர் ஊற்றி குக்க‌ரில் இர‌ண்டு விசில் விட்டு வேக‌ விட்டு இர‌க்க‌வும்.

அப்ப‌டியே ந‌ல்ல‌ ம‌சுமையாக‌ வெந்து விடும், புளியை ஒரு ட‌ம்ள‌ர் த‌ண்ணீரில் க‌ரைத்து கொள்ள‌வும்.த‌ட்டி கொள்ள‌ வேண்டிய‌ பொருட்க‌ளை மொத்த‌மாக‌ முத‌லில் மிள‌கு சீர‌க‌த்தை இடித்து அத்துட‌ன் ப‌ச்ச‌மிள‌காய்,பூண்டு க‌ருவேப்பிலையை சேர்த்து த‌ட்டிகொள்ள‌வும்.

தாளிக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளை தாளித்து த‌ட்டிய‌ பொருள்க‌ளை சேர்த்து ந‌ன்கு வ‌த‌க்கி பிள‌ம்ஸ் வெந்த‌ த‌ண்ணீர் + புளி க‌ரைச‌லை சேர்த்து உப்பு சேர்த்து நுரைத்த‌தும் இர‌க்க‌வும்.
தேவைப‌ட்டால் சிறிது நெய் சேர்ர்த்து கொள்ள‌லாம்.


சுவையான சத்தான பிளம்ஸ் ரசம் ரெடி.

Wednesday, March 24, 2010

துபாயில் பேச்சுலர்களின் வாழ்க்கை. - 1







பேச்சுலர்ஸ் வாழ்க்கை மிக கொடுமையானது,மிகவும் சுமையானது, ஆங்காங்கே பிலிப்பைனி பிகருங்க இருப்பதால் கொஞ்சம் சுவையாக இருக்கு.
பிள்ளைகள் படித்து முடித்து விட்டு அடுத்த கட்டம் வேலை தேடல் அதுவும் புதுசா வெளியூர் வந்து வேலை தேடுவது போல் ஒரு கஷ்டம் வேறெதுவும் இல்லை.
வெளிநாட்டில் வேலை பார்க்கும் பேச்சுலர்கள் பற்றி எழுதனும் என்றால் அதற்கு ஒரு பதிவு போதாதாது.
ஊரிலிந்து தாய் தந்தையர்கள், உறவுகள் எல்லாத்தையும் விட்டுவிட்டு தனியே இங்கு வந்து வேலை பார்க்க வருகிறார்கள்.

வந்ததும் முதலில் நல்ல ரூம் கிடைக்கனும், சாப்பாடு,நல்ல நண்பர் கிடைக்கனும். இதுவரை அம்மா கையால் சாப்பிட்டு விட்டு இங்கு ஓவ்வொன்றிற்கும் நாமா தேடி போய் சாப்பிடனும்.மனதளவில் பெரும் சோகம்.
இப்ப தான் தோனும் ஆகா அம்மா கையில் வைத்து கொண்டு தாங்கினார்களே. என்ன ஆட்டம் போட்டோம். அப்படி எல்லாம் நினைக்க தோனும்.

இங்கு வரும் பேச்சுலர்களுக்கு முதலில் ஏற்படுவது அல்சர் தான் உணவு ஒத்துக்கொள்ளாமல்.ச‌மைக்க‌ தெரியாத‌வ‌ர்க‌ள் ஹோட்ட‌லில் சாப்பிடுப‌வ‌ர்க‌ளுக்கு தான் முத‌லில் இந்த‌ பிராப்ள‌ம் வ‌ரும்.

நல்ல சமைக்க தெரிந்தவர்களுக்கு கவலை இல்லை. 
 அதுவும் ரூமில் எட்டு பத்து பேர் அதில் ஒரு சமையல் ராஜா இருந்தால் அவர்க்க்கு கொண்டாட்டம் தான் ஒன்லி குக்கிங் , மற்றவர்கள் ரெடியா வைப்பார்கள் இவர் ஒரு கறி மட்டும் செய்து விட்டு போவார்.

அதோடு மீதி பேர் எல்லாம் வேலைய பிரித்து காய்கறி , மார்கெட் போக ஒருவர், கட்டிங்க்ஸ் புட்டிங்க்ஸ் ஒருவர், அலிச்சாட்டம் செய்து போட்ட கிச்சன கிளீன் செய்து சாமான் கழுவ ஒருவர் என்று பிரித்து கொள்வார்கள்.
அப்படியே வயசு வாரி பெரியாப்பா,மாமா, மச்சான், தம்பி, மாப்ளே, மருமவன் என்று அவர்களுக்குள்ளே உறவுவாக இருப்பார்கள். வெவ்வேறு ஊரிலிருந்து வந்து ஒரு குடும்பமாய் வாழ்கிறார்கள்.

இதுக்கு தான் பெண்குழந்தைகளுக்கு சமையல பழக்குவதை விட ஆண்குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பது நல்லது போல.
காலையில் எழுந்ததும் பாத்ரூமுக்கு கியு.. ஓவ்வொருத்தருக்கும் ஓவ்வோரு டைம் வேலைக்கு போகும் நேரத்தை பொருத்து போகனும்.
இப்பவாவது பரவாயில்லை 20 வருடங்களுக்கு முன் எல்லாம் போனில் தொடர்பு கொள்வது, கடிதம் வரவு எதிர் பார்ப்பு எல்லாம் உண்டு. போன் பேச பூத்துக்கு செல்லனும். கடிதம் போட்டாலும் ஊரிலிருந்து வரவும் எப்படியும் சவுதி என்றால் 10 , 15 நாட்கள் ஆகும், துபாய் என்றால் ஒரு வாரம் ஆகும்.
இப்ப நல்ல வசதிகள் ஈமெயில், சாட்டிங், செல் போன் என்று மணிகனக்கா பேசினாலும், பத்த மாட்டுங்கிறது. ஆனால் சம்பாதிக்கும் காசை போனில் தான் நிறைய பேச்சுலர்கள் செலவிடுகின்றனர்.





துபாயில் மட்டும் இல்லை உலகத்தில் எல்லா இடங்களிலும் வெளியில் தங்கி படிக்கும் அனைத்து பேச்சுலர் ,வேலை பார்க்கும் பேச்சுலர்கள் லைஃபும் இப்படி தான்.

அதான் பாட்டிலேயே பாடினார்களே'' புறா கூண்டு போல 30 ரூமு.'' என்று பாட்டும் உண்டு.



வெளி நாட்டு வாழ்வில் நொந்தவர்கள் எழுதிய கவிதையை படிங்க ,இது என் கவிதை இல்லை, எனக்கு கரண்டிய தவிர ஒன்னும் தெரியாது





இது நான் எழுதிய கவிதை கிடையாது, யார் எழுதியதுன்னு தெரியல



ஒட்டுமொத்த உறவுகளையும்
சுருக்கி நினைவுகளாக இதயத்தில்
சுமந்து பாலைவனத்திற்கு வந்துவிட்டேன்
சிறைவா சியாக!




இறுக்கிப் பிடித்த
இதயம் மட்டும்
இரவினில் கொப்பளிக்கும் உறவுகளை எண்ணி!!
தனிமையில்
தல ையணை மட்டுமே துணையாக!
ஈரம் காத்துக் கொண்டிருக்கும் கண்கள்
தூரத்தில் உள்ள உறவுகளை எண்ணி!!
ஆறுதலாக என்
அழுகை சப்தம் மட்டும்
சப்தமே இல்லாமல்!!
குரல்களில ் மட்டுமே
குடும்பம் நடத்தும் கொடுமை!!
கட்டிய மனைவியும்
தொட்டிலில் குழந்தையும்!
நடக்க ஆரம்பித்துவிட்டான் என்பதையே
நடுவில் ஒருவர் கூற;
நனைந்த கண்களை துடைத்துவிட்டு
சிரிக ்க மட்டுமே முடிந்தது!!


மெல்லிய உதடுகளை
ஈரம் கொண்டிருக்கும் எச்சிலின் உதறலோடு
தட்டிய கைகளோடு ஒரு முறை சொன்னான் Daddy என்று! அணைத்து முத்தமிட்டேன் கைபேசியை!!!


(தொடரும்)

Tuesday, March 23, 2010

சர்க்கரை வியாதிக்கு பாகற்காய் மற்றும் தண்ணீர் சேமிப்பு

பாகற்காயுடன் மிளகு சீரகம் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டிய தண்ணீரை குடிக்கவும். ரொம்ப மிளகு சேர்க்க தேவையில்லை. (பாகற்காய், தண்ணீர் எல்லாமே குடிக்கும் அளவிற்கு அரைத்து வடிக்கட்டி குடிக்கவும்.தொடர்ந்து வாரம் ஒரு முறை குடித்து வரலாம்.(இது எங்க மாமியார் சொன்னது).



கலோஞ்சி என்கிற கருஞ்சீரகம் சர்க்கரை வியாதி, பிரெஷர் எல்லாத்துக்கும் நல்லது.க‌ருஞ்சீர‌க‌த்தை இரவு த‌ண்ணீரில் ஊற‌வைத்து காலை வெரும் வ‌யிற்றில் அந்த‌ த‌ண்ணீரை குடிக்க‌வும்.


வெந்தய‌ம் இர‌வு ஊற‌வைத்து காலையில் அதை வ‌டித்து அந்த‌ த‌ண்ணீரை காலையில் குடிக்க‌வும். இல்லை அதை ந‌ல்ல‌ கொதிக்க‌ வைத்து வ‌டிக‌ட்டியும் குடிக்க‌லாம்/


லோ பேட் மோரில் க‌ருவேப்பிலை, இஞ்சி, வெந்த‌ய‌ப்பொடி க‌ல‌ந்து அரைத்து 11 ம‌ணி வாக்கில் குடிக்க‌லாம், இதே வெயிட்டை குறைக்க‌வும் உத‌வும். வெயிலின் தாக‌த்தையும் தீர்க்கும்.


தண்ணீர் எவ்வளவு குடிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு வியாதிகளில் இருந்து விடுதலை பெறலாம்.
தண்ணீர் பயன்படுத்துவது துவைக்க, வீடுகழுவ, குளிக்க, சிக்கனமாக பயன்படுத்து நல்லது.
தண்ணீர் நிறைய குடிக்கலாம் என்றால் வெரும் தண்ணீர் நிறைய குடித்தால்சிலருக்கு கொமட்டும்.


அதை ஜூஸ், மோர் , சூப், இளநீர்,தர்பூஸ் என்று குடிக்கலாம்


காய்க‌ள்(புட‌ல‌ங்காய்,க‌த்திரிக்காய், வெண்டைக்காய்,பீன்ஸ்,கோவைக்காய் அவரைக்காய் ,இது போல் ப‌ச்சை நிற‌முள்ள‌ நீர் ச‌த்து மிகுந்த‌ காய் க‌ளை பொரிய‌ல், கூட்டு குழ‌ம்பாக‌ வைத்து சாப்பிட‌லாம்.
வேப்பம்பூ கிடைத்தால் அதை நெயில் வதக்கி சாதம் சாப்பிடும் முன் ஒரு ஸ்பூன் சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம்.

பிராமண ஆத்தில் பிரசத்தி பெற்ற பாகற்காய் பிட்லையை இங்கு சென்று பார்த்து சமைக்கவும். கசப்பில்லாமல் இருக்கும்

பாகற்காயை கசப்பில்லாமல் சமைக்க என் ஸ்வீட் & சோர் பாகற்காயை செய்து பாருங்கள்.இன்னும் நிறைய இருக்கு பிறகு போடுகிறேன்.





த‌ண்ணீர் சிக்கன‌ம் என்ற‌து குடிக்கும் த‌ண்ணீரின் அள‌வை குறைக்க‌ வேண்டாம், எவ்வ‌ள்வு வேண்டுமானாலும் குடிக்க‌லாம்.

அதுக்குன்னு ஜ‌லீலா அக்காதான் சொன்னாங்க‌ன்னு ராத்திரில‌ தின‌ம் நிறைய‌ போட்ற‌ க்கூடாது.

உட்கொள்ளும் தண்ணீரின் அள‌வை கூட்டி, வெளியில் ப‌ய‌ன்ப‌டுத்தும் த‌ண்ணீரின் அளவை (குளிக்க, புழங்க) குறைத்து கொள்ள‌வும்
தண்ணீர் எவ்வளவு குடிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு வியாதிகளில் இருந்து விடுதலை பெறலாம்.தண்ணீர் பயன்படுத்துவது துவைக்க, வீடுகழுவ, குளிக்க, சிக்கனமாக பயன்படுத்து நல்லது.





குழ‌ந்தைக‌ள் பாத்ரூமில் போனால் பின்னாடியே க‌வ‌னிக‌க்னும் அப்ப‌டியே குழாயை திற‌ந்துவிட்டுட்டு நிற்பார்க‌ள். குழ‌ந்தையிலிருந்தே சிக்க‌ண‌மாய் ப‌ய‌ன் ப‌டுத்த‌ ப‌ழ‌க்கிவிட்டால் பிற்கால‌த்தில் ந‌ல்ல‌து.






தண்ணீர் எவ்வளவு குடிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு வியாதிகளில் இருந்து விடுதலை பெறலாம்.
தண்ணீர் பயன்படுத்துவது துவைக்க, வீடுகழுவ, குளிக்க, சிக்கனமாக பயன்படுத்து நல்லது.


உலக தண்ணீர் தினம் பற்றி இங்கு சென்று அறிந்து கொள்ளலாம்.







Monday, March 22, 2010

ஒருவனின் அடிமை - பேனா முனைக்கு மிக்க நன்றி.


என்னை அறிமுகப்படுத்திய ஒருவனின் அடிமை -பேனா முனைக்கு மிக்க நன்றி+ சந்தோஷம்.

நான் எனக்கு தெரிந்த அனுபவங்களை. எப்படியாவது எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தான் பிளாக்கை ஆரம்பித்தேன்.

ஆனால் இந்த அளவிற்கு பதிவுகளை கொடுப்பேன் என்று எதிர் பார்க்கவில்லை.

இன்னும் பகிர்ந்து கொள்ள ஏராளமான பதிவுகள் இருக்கு ஆனால் பதிவு போட தான் நேரமில்லை.
நேரமின்மையால் தொடர்ந்து பதிவுகளை கொடுக்க முடியல, நிறைய பேர் தொடர் பதிவுக்கு அழைத்து இருக்கிறார்கள், முடிந்த போது போடுகிறேன்.

என் பதிவுகளை படித்து தொடர்ந்து படித்து ஊக்கமளித்து பின்னூட்டம் மட்டும் ஓட்டளிக்கும் அனைத்து பதிவுலக நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
பேனா முனை இதில் சென்று பார்க்கவும்.

எல்லா புகழும் இறைவனுக்கே. தூஆ செய்யுங்கள்.

Saturday, March 20, 2010

பெண்களுக்கு கால் வலி ஏன் வருகிறது?

பழங்காலத்தில் பெண்கள் அடுக்களையில் கீழே உட்கார்ந்து சமைப்பார்கள்.ஆகையால் பழங்காலத்து பெண்களுக்கு இப்ப உள்ள பெண்கள் போல் இடுப்பு வலியோ கால் வலியோ கிடையாது.
அந்த காலத்தில் அண்டா அண்டாவா கூட்டு குடும்பத்தில் பெண்கள் சமைப்பார்கள், எல்லோரும் திடகாத்திரமாக தான் இருந்தார்கள். இந்த காலத்து பெண்கள் கொஞ்சம் நாளிலேயே முடியல மூட்டு வலி , கால் வலி இடுப்பு வலி என்கிறார்களே என்னவா இருக்கும் என்று சமைக்கும் போது தான் நிறைய யோசனை வரும், யோசிச்சேன் என் கருத்து இது.


பழங்காலத்தில் பெண்கள் அடுக்களையில் கீழே உட்கார்ந்து சமைப்பார்கள்.
ஆகையால் பழங்காலத்து பெண்களுக்கு இப்ப உள்ள பெண்கள் போல் இடுப்பு வலியோ கால் வலியோ கிடையாது.
ஆனால் இப்போது இருகிற மார்டன் உலகில் நின்று கொண்டு தான் சமைக்கிறோம்
அந்த காலத்தில் ஆட்டுரல், அம்மி, கினற்றில் நீர் இறைப்பது போன்ற வேலைகளை செய்வதால் உடற்பயிற்சி என்பது அதிலேயே எல்லாம் கிடைத்து விடுகிறது
இந்த காலத்தில் துவைக்க அரைக்க சாமான் கழுவ என்று எல்லாத்துக்கும் மிஷின் வந்து விட்டது. இப்படி மிஷின் இருந்தும் சிலருக்கு அதில் இருந்து எடுத்து காய போட சோம்பேறி தனமாக இருக்கிறது.


சமையலறையிலேயே இரண்டு மணி நேரமானலும் நின்று கொண்டு சமைக்கிறோம்.
சில‌ பேர் தான் கிச்ச‌னில் சேர் போட்டு கொண்டு கொஞ்ச‌ம் நேர‌த்திற்கொருமுறை உட்கார்ந்து கொள்வார்க‌ள்.
ஆனால் வேலைக்கு போகும் பெண்க‌ள், அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மா ச‌மைப்ப‌தால் அவ‌ர்க‌ளுக்கு நேர‌ம் இருக்காது.


ரெஸ்ட் எடுத்து வேலை செய்ய‌. ஆனால் வேலைக்கு செல்லும் பெண்க‌ளை விட‌ வீட்டில் உள்ள‌ பெண்க‌ளுக்கு தான் வேலை அதிக‌ம். அப்ப‌டியே கிச்ச‌ன் மேடை கிட்ட‌ நின்று கொண்டே காய‌ ந‌ருக்காம‌ல் உட்கார்ந்து எல்லாம் ரெடியாக‌ க‌ட் செய்து வைத்து விட்டு பிற‌கு செய்ய‌லாம்.இஞ்சி பூண்டு நருக்கும் போது அதிக நேரம் எடுக்கும் அதற்கு உட்கார்ந்து பார்க்கலாம்.

இப‌ப்டி நின்று கொண்டு ச‌மைக்கும் போது சில‌ பேர் தாளிக்கும் போது ர‌ச‌ம் கொதிக்கும் போது, காய் வேகும் போது அப்ப‌டியே ச‌ட்டிய‌ உற்று பார்த்து கொண்டு இருக்காம‌ல் அந்த‌ நேர‌த்தில் சின்ன‌ சின்ன‌ உட‌ற்ப‌யிற்சி செய்து ந‌ம்மை ரிலாக்ஸ் செய்து கொள்ள‌லாம்.

ஓவ்வொரு உட‌ற்ப‌யிற்சியையும் 5 க‌வுண்ட் அள‌விற்கு செய்ய‌லாம்.

1. கைக‌ளுக்கு உட‌ற் ப‌யிற்சி இர‌ண்டு கைக‌ளையும் ப‌க்க‌ வாட்டில் நீட்டி முன்னும் பின்னுமாக‌ சுழ‌ற்ற‌லாம்.இத‌னால் கை தோள்ப‌ட்டை வ‌லி கையில் உள்ள‌ ச‌தை குறைய‌ ந‌ல்ல‌து.

2. தோப்பு க‌ர‌ண‌ம் போடுவ‌து போல் இடுப்பில் கை வைத்து கொண்டு பாதி அள‌விற்கு உட்கார்ந்து எழுந்திரிக்க‌லாம். எல்லாம் ஒரு 5 க‌வுண்ட் அள‌விற்கு செய்ய‌லாம். இது மூட்டு வ‌லிக்கு ந‌ல்ல‌ உட‌ற்ப‌யிற்சி.

3. இடுப்பில் கை வைத்து கொண்டு நேராக‌ நின்று கொண்டு இட‌து வ‌ல‌து புற‌ங‌க‌ளில் சுழ‌ற்ற‌லாம். இது இடுப்பு வ‌லிக்கு ந‌ல்ல‌ உட‌ற்ப‌யிற்சி.


4. த‌லையை ம‌ட்டும் மேலும் கீழும், இட‌து வ‌ல‌து புற‌ங்க‌ளில் சுழ‌ற்ற‌லாம், இது க‌ழுத்து நல்ல‌ உட‌ற்ப‌யிற்சி.



5. உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்காதவர்கள் அப்ப‌டியே ஒரே மூச்சா வேலை செய்யாம‌ல் இப்ப‌டி சின்ன‌ சின்ன‌ உட‌ற்ப‌யிசிக‌ளை செய்து கொண்டே வீட்டு வேலையை செய்ய‌லாம்.

6. துணி துவைக்க கூட அடித்து துவைக்க எதிரில் கல் இருக்கும்.
துணி துவைக்க‌ வாஷிங் மிஷின் தான் ஆனால் சில‌ டோர் மேட்க‌ளை கையில் தான் துவைக்க‌ வேண்டி வ‌ரும் , அதை ந‌ல்ல‌ சோப்பு த‌ண்ணீரில் ஊற‌வைத்து விட்டு கீழே போட்டு நாலு மிதி மிதிச்சா அழுக்கும் போகும் கால் வ‌லிக்கும் ஒரு ந‌ல்ல‌ உட‌ற்ப‌யிற்சியாகுது.


7. குழந்தைகளை குளிக்க வைக்க கூட குருக்கு வலிகக் குனிந்து குளிக்க வைக்காமல் கீழே ஒரு சின்ன ஸ்டூல் போட்டு குளிக்கவைக்கலாம்.


8.கம்பியுட்டர் முன் அரைமணி நேரத்துக்கு மேல் உட்காராதீர்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்கள். சேரில் உட்கார்ந்து கொண்டே செய்யும் உடற்பயிற்சிகளை செய்யலாம்.
9. வாகணங்களில் செல்லும் போது கூட (ஓட்டுபவர்களை சொல்லல)ஐந்து நிமிடம் கண்களை மூடி கண்ணுக்கும் ரெஸ்ட் கொடுக்கலாம்.

10. இரவு தூங்க போகும் போது, காலை எழுந்திரிக்கும் போது கூட எழுந்ததும் உட்கார்ந்து கொண்டு நேராக இரண்டு காலின் பெருவிரலை தொடவேண்டும் இப்படி செய்வதாலும் முதுகு வலி சரியாகும், (பிறகு முதுகுவலிக்கு ஈசியான உடற்பயிற்சிகளை போடுகிறேன்.)

அதற்கு தகுந்த நலல் உணவும் சாப்பிட்டு கொள்வது நல்லது.
வேலை பிஸியில் பெண்கள் காலையில் சாப்பிடும் டீ, டிபன் கூட மறந்து விடுகிறார்கள்.
இப்போது நிறைய பெண்களுக்கு சின்ன வயதிலேயே முதுகுவலி கால் வலி இடுப்புவலி, என்று வந்து விடுகிறது.
தகுந்த உடற்பயிற்சியின் மூலம் இது போன்ற வலிகளை தவிர்த்து கொள்ளலாம்.
முடிந்தவர்கள், நான்கு முறை மாடிப்படி ஏறி இரங்கலாம்.
ஸ்கிப்பிங் ஆடலாம். நீந்துதல் உடற்பயிற்சி செய்யலாம்.

நீந்துதல் உடற்பயிற்சி மூலம் அதிகப்படியான முதுகுவலி, இடுப்புவலி ,கால் வலி கூட சரியாகும்.
மன அழுத்தத்தையும் குறைக்கலாம்.


முடிந்த அளவு நடைபயிற்சி செய்யுங்கள். தினம் ஒருமணி நேரம் நடப்பதன் மூலம் சர்க்கரை வியாதி பிரஷரை கூட கட்டு படுத்தலாம்.



டிஸ்கி: இதில் வெளிநாட்டில் சமைக்கும் ஆண்களுக்கும் இந்த டிப்ஸை பின்பற்றலாம்.




Thursday, March 18, 2010

தம் கேபேஜ் - tham cabbage - diet





ட‌ய‌ட்டுக்கு ஏற்ற‌ சைட் டிஷ், இதில் தேங்காய் எதுவும் சேர்க்க‌வில்லை.ச‌ப்பாத்தி ப‌ரோட்டாவிற்கு தொட்டு சாப்பிட‌ ந‌ல்ல‌ இருக்கும்.இதே போல் காலிபிள‌வ‌ரில் செய்தால் சுவை அபார‌மாக‌ இருக்கும்.

கேபேஜ் = கால் கிலோ
எண்ணை = இரண்டு தேக்கரண்டி
வெங்காயம் = ஒன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் = அரை தேக்க‌ர‌ண்டி
மிளகாய் தூள் = அரைதேக்கரண்டி
கொத்துமல்லி தூள் = கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் = கால் தேக்கரண்டி
உப்பு = அரை தேக்கரண்டி(தேவைக்கு)
கரம் மசாலா தூள் = கால் தேக்கரண்டி

கேபேஜை பொடியாக அரிந்து கொள்ளவும்.
வான‌லியில் எண்ணை விட்டு வெங்காய‌ம் போட்டு வ‌த‌க்க‌வும்.
வ‌த‌ங்கிய‌தும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வ‌த‌க்கி, பொடியாக‌ அரிந்த‌ கேபேஜை சேர்த்து வ‌த‌க்கி ஐந்து நிமிட‌ம் முடி போட்டு த‌ம்மில், சிறு தீயில் வேக‌ விட‌வும்.பிற‌கு தூள் வ‌கைக‌ளை சேர்த்து (க‌ர‌ம் ம‌சாலா த‌விர‌) மீண்டும் ஐந்து நிமிட‌ம் த‌ம்மில் வேக‌ விட‌வும்.
க‌டைசியாக‌ க‌ர‌ம் ம‌சாலா தூவி இர‌க்க‌வும்.






//முட்டை கோஸ் என்றாலே யாருக்கும் பிடிக்காது அதை பிரைட் ரைஸ்,KFC சால‌ட் , க‌ட‌லை ப‌ருப்போடு கூட்டு, முர்த‌பாவில் , ச‌மோசாவில் எல்லாம் சிறிது சேர்த்து கொண்டால் பிடிக்காத‌வ‌ர்க‌ளுக்கு சைல‌ண்டா உள்ளே த‌ள்ளிட‌லாம்.//
அசைவ பிரியர்கள் இதில் ஒரு முட்டைய கலந்து கொள்ளலாம், (ஆனால் மங்குனி அமைச்சருக்கு மட்டும் ஸ்பெஷலா டயனோசர் முட்டை தான்)

டிஸ்கி: ஸாதிகா அக்காவிற்கு கேபேஜ்ன்னா பிடிக்காதாம் அதான் ஸாதிகா அக்கா இது போல் செய்து சாப்பிட்டு பாருங்க‌ள்.


Wednesday, March 17, 2010

எக் வெல்லம் இட்லி - egg jaggery idly

தேவையான பொருட்கள்



இட்லி மாவு = 5 இட்லிக்கு தேவையான அளவு
வெல்லம் பாகு (கட்டிப்பாகு) = ஒன்னறை மேசைகரண்டி
நெய் = தேவைக்கு
முட்டை = ஒன்று
உப்பு = ஒரு சிட்டிக்கை





செய்முறை


இட்லி த‌ட்டில் நெய் த‌ட‌வி முட்டையுட‌ன் வெல்ல‌பாகை க‌ல‌ந்து முத‌லில் வெல்ல‌ம் முட்டை க‌ல‌வை, பிறகு மாவில் உப்பு கலந்து ஊற்றவும். மாவு இட்லி குழியில் முக்கால் பாகம் தான் இருக்கனும். அப்ப தான் பொங்கி வர சரியாக இருக்கும்.ஏழு நிமிடங்கள் வேக விட்டு இரக்கவும்.

வெல்ல‌ம் எக் இட்லி (பெரிய‌வ‌ர்க‌ளுக்கு)
மேலே குறிப்பிட்ட‌ பொருட்க‌ளுட‌ன், ஏல‌ப்பொடி கால் தேக்க‌ர‌ண்டி, தேங்காய் துருவ‌ல் ஐந்து தேக்க‌ர‌ண்டி சேர்த்து செய்து கொள்ள‌லாம்.



குறிப்பு

வெல்ல பாகு எடுக்கும் போது முதலில் வெல்லத்தை தண்ணீரில் கரைத்து ஒரு கொதி வரும் போது வடிகட்டி கொள்ளவும், வெல்லத்தில் கல் இருக்கும்.பிறகு பாகை வற்றவிட்டு கொள்ளவும்.

இதில் முட்டை சேர்ப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் சத்தான உணவாகிறது.நல்ல மெத்துன்னு ஷாப்டாகவும் இருக்கும்.இது ஏற்கவே கொடுத்த தேன் இட்லி, மிளகு இட்லி.இதை கே.ஜி படிக்கும் குழந்தைகளுக்கு டிபனில் செய்து வைக்கலாம்.
இட்லி கேக்குன்னு சொல்லி கொடுங்கள்.
இந்த படம் என் தோழி ரூபி செய்து அனுப்பியது.நான் முன்பு கொடுத்த எக் இட்லி முறையில் செய்து இருக்கிறார்கள்.

Tuesday, March 16, 2010

எனக்கு பிடித்த பத்து பெண்கள்(தொடர் தொடருதுங்கோ)



இந்த தொடர் பதிவுக்கு அழைத்த நீரோடை மலிக்காவிற்கு நன்றி.


தொடர் பதிவுன்னு போட்டு நிறைய நிபந்தனைகளை வேறு போட்டு விட்டார்கள், எல்லோரும் பல பிரபல சாதனை பெண்களை சொல்லி பதிவு போட்டு இருக்கிறார்கள்.ஆனால் கூலி வேலை செய்பவர்களை பற்றி சில பேர் தான் போட்டுள்ளார்கள். அவ‌ர்க‌ளுடைய‌ உழைப்பும் எல்லோருக்கும் தெரிய‌னும். அதான் இப்ப‌டி அவ‌ர்க‌ளை ப‌ற்றி போட்டுள்ளேன்


நிபந்தனைகள் :-

1. உங்களின் சொந்தக்காரர்களாக இருக்க கூடாது.,
2. வரிசை முக்கியம் இல்லை.,
3. ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும்,
4. இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் உள்ள நபர்களாக இருக்கவேண்டும்...







1.லதா மங்கேஷ்கர் இந்தியாவின் மிகச்சிறந்த பாடகி என்ன குரல் வளம்.இவர்களுடைய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் தான்

லதா மங்கேஷ்கர் (Lata Mangeshkar, பி. செப்டெம்பர் 28, 1929) இந்தியாவின் மிகப்புகழ் பெற்ற ஒரு பாடகியாவார். இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப் படுபவர்.இந்தியாவின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் இவர் ஒருவராவார். இவரது கலையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. நான்கு வயதில் பாடுவதற்கு ஆரம்பித்த இவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.






2. விமான பணி பெண்கள் என்ன ஒரு கனிவுடன் இன்முகத்துடன் சேவை செய்கிறார்கள். அவர்கள் சீருடையே ஒரு தனி அழகு தான்.









3.செவிலியர்கள், இவர்களுக்கு ரொம்பவே பொறுமை அதிகம், அதிலும் இந்த பிலிப்பைனி நர்ஸுகள் எல்லோரும் ஒரே சைஸ், என்ன ஒரு இனிமையான பேச்சு, அவர்களுக்கு கோபம் வந்தே பார்த்ததில்லை, எரிச்சல் படாமல் நோயாளிகளிடம் நடந்து கொள்ளும் விதம் எல்லாமே சூப்பர்.
அதுவும் ஊசி போட போகிறவர்கள் அவர்கள் தலைமுடியின் வாசத்திலேயே இன்னும் இரண்டு ஊசி போட்ட பரவாயில்லையேன்னு நினைக்க வைக்கும் ரங்கமணிகளை... ஹி ஹி









4.வீடு கட்டும் போது கட்டுமானத்தில் முக்கியமாக சித்தாள் கண்டிப்பாக உண்டு. இந்தியாவில் எல்லா இடங்களில் சித்தாள்களை வைத்து தான் வேலை நடக்கிறது. கணவனால் கைவிடப்பட்ட படிப்பறிவில்லாத நிறைய பெண்களை இந்த வேலையில் பார்க்கலாம்.அதே போல் தமிழ் சினிமாவிலும் (ரஜினி,சத்யராஜ்,தியாகரஜன்) எல்லோருக்கும் ஒரு பிளாஷ் பேக் கதை ஓடும் பார்த்தா அம்மா ஒரு சித்தாளாக தான் இருப்பாள்.





5.இந்திரா காந்தி

இந்திரா காந்தி, சோனியா காந்தி எல்லோரும் இவர்களை பற்றி சொல்லி இருந்தாலும், எனக்கும் இவர்களை ரொம்ப பிடிக்கும்.
இந்திரா காந்தி பாரதத்தின் முதல் பெண் பிரதமர்.இவர் நடை, உடை, பாவானை பேச்சு திறன் எல்லாமே ரொம்ப நல்ல இருக்கும்.

சமீபத்தில் அலகாபாத்தில் உள்ளா ஆனந்த பவன் அங்கு சென்ற போது அவர்கள் சிறு வயது போட்டோக்கள், கல்யாண போட்டோக்கள், மற்றும் பல போட்டோக்கள் பார்த்தேன், அனைத்தும் அவ்வளவு அற்புதம்






6. சோனியா காந்தி
சோனியா காந்தி ஒரு இத்தாலிய பெண்மணி நம் நாட்டு கலாச்சாரத்துடன் வாழ்ந்து கொண்டு சாதனை புரிந்து கொண்டு இருக்கிறார்கள். டெல்லியில் அங்ரேஜி என்று சிலர் ஏளனப்படுத்திய போது இரவு பகல் பாராது ஹிந்தி மொழியை விரைவில் கற்று கொண்டவர்.







7.பெண் ஆசிரியைகள் நிறைய பேருக்கு வீட்டில் இல்லத்தரசிகளுக்கு இரண்டு முன்று குழந்தைகளை சாமாளிப்பது எவ்வளவோ கழ்டமாக இருக்கு. எப்படாப்பா 3 வயதாகும் பள்ளியில் சேர்த்து விடலாம் என்று நினைப்பார்கள்.
ஆனால் ஒரு வகுப்பில் 35 பிள்ளைகள வைத்து அதுவும் கே.ஜி யிலிருந்து 3ஆம் வகுப்பு வரை சமாளிப்பது மிக கடினமே. அப்படி அவர்கள் கற்றுக்கொடுத்து , இருப்பதிலேயே டீச்சர் வேலையில் தான் வேலைகளும் மிக அதிகம். சாட், புராஜெக்ட் என்று இன்னும் பல.








8.ஔவையார் , ஔவையின் ஆத்திசூடியை யாராலும் மறக்க முடியாது.
அதே போல் நெல்லிக்க‌னியும் ஔவையால் தான் பிர‌ப‌லமான‌து.
(அறம் செய விரும்பு, ஐயம் இட்டு உண், ஓதுவது ஒழியேல் இளமையில் கல் , இலவம் பஞ்சில் துயில்,வைகறைத் துயில் எழு, ஊருடன் கூடி வாழ். )








9..வீடு வீடாக பத்து பாத்திரம் தேய்க்கும்(முனிமா, ராக்கமா) பெண்கள் சோம்பல் சடவில்லாமல். காலை 6 மணியிலிருந்து இரவு 8 வரை டைம் மேனேஜ்மென்டோடு வேலை உழைத்து காசு கொண்டு வந்து என்ன புரயொஜனம் அப்படி கழ்டப்பட்டு சம்பாத்தித்து கொண்டு வந்தால் அவர்களுடைய ரிக் ஷா, மூட்டை தூக்கும் ரங்கமணிகள் சாராய கடைக்கே சரியாபோகும்.அடி உதையும் வாங்கி கொண்டு வ‌ந்து வேலை பார்ப்பார்க‌ள். (ப‌ட‌த்தில் உள்ள‌து காஸ்லி வேலைக்காரி ஹி ஹி)











10.பெண் டெயிலர்கள் ஊர் ஊராக ஏற்றுமதியாகும் பல வகையான துணிகளை தைக்கின்றனர். மிக கடின உழைப்பு. இதில் பணி புரியும் நிறைய பெண்களும் ஆதவற்றவர்கள். அவர்கள் சொந்த உழைப்பைக்கொண்டு குடும்பத்தை காப்பாற்றுகிறார்கள்.





மலிக்கா சொல்வது போல் நமக்கு நம்மை தான் முதலில் பிடிக்கனும். எனக்கும் என்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

அடுத்து இந்த பதிவ தொடர அழைப்பது

நட்புடன் ஜமால் (கற்போம் வாருங்கள்)
மேனகா சத்யா
சசிகுமார் (வந்தேமாதரம்)
தோழி விஜி





முதல் போட்டோவில் உள்ள உஷா உதுப் இந்தியாவின் பாப் பாடகி, எல்லா மொழிகளிலும் கலக்கலான சூப்பர் ஹிட் பாடல்களை பாடியவர் இவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். பதினொன்றாவதாக அவரையும் சொல்லி கொள்கிறேன், நிபந்தனைய மீறிட்டேனே...

Thursday, March 11, 2010

எக் இட்லி (தேன் & மிளகு) - egg idly honey & pepper








இட்லி என்றாலே அது போல ஒரு லைட்டான உணவு எதுவுமே கிடையாது.நமக்கு சட்னியோ ,குழம்போ வைத்து சாப்பிடுவோம். வயிற்று புண், அல்ச‌ர், வ‌ந்த‌வ‌ர்க‌ள் கூட இந்த‌ இனிப்பு இட்லியை சாப்பிட‌லாம். குழந்தைகளுக்கு என்று தனியாக செய்ய முடியாத போது
இப்படி கொடுத்தால் நல்ல சத்தான இட்லி சாப்பிட்ட மாதிரி ஆச்சு.
முட்டை தேன் இட்லி

முட்டை = ஒன்று
இட்லி மாவு = 5 இட்லி சுட‌ தேவையான‌ அளவு
தேன் = 5 தேக்கர‌ண்டி
நெய் = சிறிது








முட்டையை நுரை பொங்க‌ அடித்து கொள்ள‌ வேண்டும்.அதில் தேனை க‌ல‌ந்து கொள்ள‌வும்.
இட்லி பாத்திர‌த்தில் நெய்யை த‌ட‌வி அதில் ஓவ்வொரு குழியிலும் சிறிது மாவை ஊற்றி அத‌ன் மேல் முட்டை க‌ல‌ந்த‌ தேனை ஊற்றி மேலே சிறிது மாவு ஊற்ற‌வும்.
இதே போல் 5 இட்லியிலும் ச‌மமாக‌ ஊற்றி இட்லி வேக‌ 7 நிமிட‌ம் ஆகும்.
வெந்த‌தும் எடுத்தால் பூப்போல் மெத்துன்னு இருக்கும்.


//குழ‌ந்தைக‌ளுக்கு எந்த‌ ப‌க்க‌ உண‌வும் இல்லாம‌ல் சின்ன‌ பீஸா க‌ட் செய்து அப்ப‌டியே ஒரு ஃபோர்க்கை போட்டு கொடுத்தால் ஈசியாக‌ சாப்பிடுவார்க‌ள்.
ப‌ள்ளி செல்லும் குழ‌ந்தைக‌ளுக்கும் கொடுத்து அனுப்ப‌லாம். //


முட்டை மிள‌கு இட்லி

இனிப்பு இட்லி பிடிக்காத‌ குழ‌ந்தைக‌ளுக்கு இப்ப‌டி மிளகு சேர்த்து செய்து கொடுக்க‌லாம்.



இட்லி மாவு = 5 இட்லிக்குக்கு தேவையான‌ அள‌வு
முட்டை = ஒன்று
மிள‌கு தூள் = ஒரு தேக்க‌ர‌ண்டி
உப்பு = சிறிது
நெய் = சிறிது





மிள‌கு, முட்டை, உப்பை ந‌ன்கு நுரை பொங்க‌ அடித்து கொள்ள‌வும்.
இட்லி த‌ட்டில் நெய்யை த‌ட‌வி முத‌லில் சிறிது இட்லி மாவு பிற‌கு முட்டை க‌ல‌வை மீண்டும் சிறிது இட்லி மாவு ஊற்றி இட்லிக‌ளாக‌ வார்த்து எடுக்க‌வும்.



எங்க‌ளுக்கெல்லாம் (நான் வெஜ் சாப்பிடுபவர்கள்) குழ‌ம்பில்லாம‌ல் இர‌ங்காது என்கிறீர்க‌ளா?

ம்ம் மீன் குழ‌ம்பு, சாம்பார், கால் பாயா , மட்டன் எலும்பு சூப் எல்லாம் இட்லிக்கு பொருந்தும், ஆனால் குழ‌ம்பு க‌ட்டியா வைக்காமால் ஓடு த‌ண்ணீரா வைக்க‌னும்.




இட்லி, பாகற்காய் சாம்பார்
சர்க்கரை வியாதி உள்ளவர்கள், பாகற்காய் சாம்பார் வைத்து கொள்ளலாம். சாம்பாரில் போடுவதால் பாகற்காயில் கசப்பு கூட இதில் தெரியாது.
இந்த ரெசிபி , என் தம்பி, என் தங்கை,என் தோழிகளின் குழந்தைகளுக்காக‌ (8 மாத குழந்தைகளுக்கு) க்காக நான் முயற்சி செய்தது.

Wednesday, March 10, 2010

அரபிகாரர்களின் பிரியாணி(தோழிகளுக்காக)

ஒரு பழக்கடையே நடுவுல வைத்து சாப்பிடுவது இந்த அரபிகளால் தான் முடியும்.

அரபிகாரர்களின் பிரியாணி இப்படி மூட்டை முட்டையா அரிசிய கொட்டி செய்து இத செய்ற சமையன ரொம்ப (கல்யாண சமையல் சாதம் சாப்பிடும் மாய ஜால பூதம் போல இருந்தால் தான் எறி நின்றி கிளற முடியும் போல‌





இந்த கிணற்றில் எத்தனை முழு ஆட்டை இரக்கியிருப்பார்கள்.





//ப‌ழ‌ங்ககால‌த்தில் இஸ்லாமிய‌ இல்ல‌ங்க‌ளில் பெரிய‌ த‌ட்டு தாலாவில் தான் அதை க‌ல‌ம் என்று சொல்வார்க‌ள் ஒரு க‌ள‌த்தில் ஐந்து பேர் கூட்டாக‌ உட்கார்ந்து சாப்பிடுவார்க‌ள்.
இஸ்லாமியர்கள் இப்படி ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது சகோதரத்துவமும், ஒற்றுமையையும் உண்டாகும்,ரிஸுக் விஸ்திரணம் (உணவில் அபிவிருத்தி)ஏற்படும்.
இது இஸ்லாமிய‌ இல்ல‌ க‌ல்யாண‌ங்க‌ளில் 5 ந‌ப‌ர்க‌ள் ஒரு தாலா(ச‌ஹ‌ன், க‌ல‌த்தில்) உட்கார்ந்து சாப்பிடுவோம்.
சில இடங்களில் வாழையிலையிலும் சாப்பிடுவோம்//

டிஸ்கி:இது அருசுவை தோழிகள் (அதிரா, இலா, ஜீனோ,இமா, செல்வி அக்கா, கவி,ஆசியா,ஸாதிகா அக்கா,ஹுஸைன்னாம்மா, பாயிஜா,மேனகா, கீதா ஆச்சல் பீ சீரியஸ், இளமதி, உமா, சகோ.ஹைஷ் இவர்களுக்காக போட்ட பிரியாணி , வாங்க எல்லோரும் சாப்பிடலாம்.
நிறைய என்பதால் என்னால் செய்ய முடியல ஆகையால் ஆள்வைத்து சமைத்தேன் ஹா ஹா.
(இது 3 மண் சாப்பாடு , 1 மண் என்றால் 4 கிலோ)
சகோ.ஹைஷ், அதிரா இலாவிற்கு தெரியாம் இரண்டு முட்டை பிரியாணியுனுள் ஒளித்து வைத்துள்ளேன் . பார்த்து சாப்பிடுங்கள்.

"இது மகளிர் தின ஸ்பெஷல் பிரியாணி" மகளிர் தின கொண்டாட்டம்
மகளிர் தின ஸ்பெஷல் பதிவில் என்னிடம் ஏதும் ஸ்பெஷலா போடலையான்னு கேட்டவர்களும்,மற்ற தோழிகளும் இந்த விருந்தில் கலந்து கொள்ளலாம்.








Monday, March 8, 2010

பேச்சுலர்ஸ் ஆனியன் ஆம்லேட்





வெளிநாடுகளில் பேச்சுலர்களுக்கு ஈசியான காலை உணவு.குப்பூஸுட‌ன் சாப்பிட‌ ந‌ல்ல‌ இருக்கும்.
இந்த ஆம்லேட் தான் முட்டை ரெசிபியிலேயே மிக சுலபம். இந்த ஆம்லேட் எல்லா டிஷ் க்கும் பொருந்தும்.
பிரெட், பன், ரொட்டி, பரோட்டா, சப்பாத்திக்கு இது ஒன்று போதும், ஆபிஸ்க்கு டிபன் எடுத்து செல்லவும் நொடியில் தயாரித்து விடலாம்.





தேவையான பொருட்கள

தேவையான பொருட்கள்
முட்டை = முன்று
உப்பு தூள் = கால் தேக்கரன்டி (தேவைக்கு)
மிளகாய் தூள் = அரை தேக்கரண்டி
பச்ச மிளகாய் = இரண்டு
வெங்காயம் = இரண்டு
எண்ணை = இர‌ண்டு தேக்க‌ர‌ண்டி
ப‌ட்ட‌ர் = கால் தேக்க‌ர‌ண்டி(தேவைப்ப‌ட்டால்)



செய்முறை
முட்டையில் உப்பு, மிள‌காய் தூள் சேர்த்து ந‌ன்கு அடித்து, வெங்காய‌ம் ப‌ச்ச‌ மிள‌காயை பொடியாக‌ அரிந்து சேர்த்து கலக்கவும்.



தோசை த‌வ்வாவில் எண்ணை+ப‌ட்ட‌ர் சேர்த்து பொரித்தெடுக்க‌வும்.


குறிப்பு
இதில் ட‌ய‌ட் செய்ப‌வ‌ர்க‌ள் வெரும் வெள்ளை க‌ருவில் ம‌சாலா, வெங்காய‌ம், ப‌ச்ச‌மிள‌காயை க‌ல‌க்கி ஆலிவ் ஆயிலில் பொரித்தெடுக்க‌வும்.
இது ர‌ச‌ம் சாத‌ம், ப‌ருப்பு சாத‌ம் , உப்புமா,தட்டு ரொட்டி, இன்னும் ப‌ல‌வ‌கை உண‌வுக‌ளுக்கு பொருந்தும்.




எந்த‌ பக்க உணவும் இல்லை என்றால் இந்த முட்டை இருந்தால் போதும்
இதில் மசாலா சிம்பிளாக போட்டுள்ளேன்.
இது அவசர ஆனியன் ஆம்லேட் என்றும் சொல்லலாம்.
மிளகாய் தூளுக்கு பதில் மிளகு தூளும் சேர்த்து கொள்ளலாம்.
அதிலேயே கொஞ்சம் இஞ்சி பூண்டு பேஸ்ட், கொத்துமல்லி தழை, மஞ்சள் தூள் சேர்த்தும் அவரவர் ருசிக்கு ஏற்றவாறு சுடலாம்.













மகளிர் தின வாழ்த்துக்கள்





உலகத்தில் உள்ள‌ அனைத்து பெண்களுக்கும்( பெண் பதிவர்களுக்கும்) மகளிர் தின வாழ்த்துக்கள்.






இந்தாங்க எல்லோருக்கும் ஒரு ரோஜாப்பூ.







மகளிர் தின ஸ்பெஷல் செய்திகள் ளை இங்கு சென்று படித்து கொள்ளவும்.அப்படியே காஞ்சனாவின் ஓட்ஸ் பொங்கலையும் சுவைத்து மகிழுங்கள்


மார்ச் 8 மகளிர் தினம் வந்தது எப்படி? இதில் சென்று தெரிந்து கொள்ளலாம்/