Thursday, August 6, 2009

ரபிஷ் ரஹ்லி


ரப்பிஷ் ரஹ்லி சத்ரி வ யஸ்ஸிர்லி அம்ரி வஹ்லுல் உஹ்ததம் மில்-லிசானி யஃப்கஹூ கௌலி



. "இறைவா! எனக்காக என் என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கித் தருவாயாக!
என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!
என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக என் நாவிலுள்ள (திக்குவாய்) முடிச்சையும் அவிழ்ப்பாயாக!"

இந்த‌ தூஆ பெரிய‌ பெரிய‌ ஆலிம்க‌ள், மேடையில் பேசுப‌வ‌ர்க‌ள், டீவியில் குர் ஆன் ஓதுப‌வ‌ர்க‌ள் இதை ஓதிட்டு தான் ஆர‌ம்பிப்பார்க‌ளாம்.
இது தெக்குவாய் உள்ள‌ பிள்ளைக‌ளுக்கு ஓத‌ சொல்வார்க‌ள்.
பொதுவாக‌ நாமும் அடிக்க‌டி இதை ஓத‌லாம், ஓவ்வொரு நாளும் எவ்வ‌ள‌வோ க‌வ‌லை கொள்கிறோம் அதிலிருந்து லேசாக‌ இதை ஓத‌லாம்.
அல்லாவே என்னை ராகாத்தாக்கி வை, என் காரிய‌ங்க‌ளை என‌க்கு லேசாக்கி வை என்று கேட்க‌லாம், ம‌லைபோல் உள்ள‌ வேலையை செய்ய‌ ஆர‌ம்பிக்கும்போது கூட‌ இதை ஓத‌லாம். அல்லா அதை க‌டுக‌ள‌வு ஆக்கிவிடுவானாக‌.

4 கருத்துகள்:

அதிரை அபூபக்கர் said...

நல்ல பயனுள்ள துஆ வை கூறியுள்ளீர்கள்...

S.A. நவாஸுதீன் said...

ஹை, இது நாங்க ஸ்கூல்ல படிக்கும்போது பிரேயர்ல ஒதுர துஆ. ரொம்ப வருஷங்கள் ஆச்சு. மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி சகோதரி

Jaleela said...

//நல்ல பயனுள்ள துஆ வை கூறியுள்ளீர்கள்...//
நன்றீ சகோதரர் அபூபக்கர்.

Jaleela said...

//ஹை, இது நாங்க ஸ்கூல்ல படிக்கும்போது பிரேயர்ல ஒதுர துஆ. ரொம்ப வருஷங்கள் ஆச்சு. மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி சகோதரி//


ஆமாம் எங்க உம்மா பிள்ளைகளுக்கு ஓத சொன்னார்கள், தினம் சொல்லி கொண்டே இருப்பேன், பள்ளி செல்லும் போது,

நவாஸ் தவறாமல் கருத்து தெரிவிப்பதற்கு மிக்க நன்றி.உங்கள் பதில் தான் அடுத்து என்ன போடலாம் என்று யோசிக்க வைக்கிறது.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா