Wednesday, July 1, 2009

இடியாப்பம் வதக்கல்






  • இடியாப்ப‌ம் எண்ணை இல்லாத‌ அயிட்ட‌ம் அதை நாம் ப‌ல‌வ‌கையாக‌ ந‌ம் விருப்ப‌த்திற்கு ஏற்ற‌வாறு செய்ய்ய‌லாம்.

    இது பார்க்க வெள்ளையாக இருக்கும் பச்சமிளகாய், வெங்காயம், மிளகு சேர்த்து செய்வது.
  • இது நம் விருப்பத்திற்கு ஏற்ப தேங்காய் பால் ஊற்றியோ, பீர்ணி தொட்டோ சாப்பிடலாம்.
  • முட்டை இடியாப்பம் வதக்கல் (இரண்டு முறையில் செய்யலாம், வெள்ளையாகபச்சமிளகாய் சேர்த்து , அல்லது மிளகாய் தூள் சேர்த்து)கீமா சேர்த்து வ‌த‌க்குவது, காய்க‌றிக‌ள் சேர்த்து வ‌த‌க்குவ‌து, இடியாப்ப‌ பிரியாணி

    தே.பொருட்க‌ள்



    இடியாப்பம் = நான்கு
    முட்டை = முன்று
    மிளகு = அரை தேக்கரண்டி
    பச்ச மிளகாய் = முன்று
    வெங்காயம் = முன்று
    உப்பு = தேவைக்கு
    சர்க்கரை = அரை தேக்கரண்டி
    நெய் = அரை தேக்கரண்டி
    எண்ணை முன்று = தேக்கரண்டி
    ப‌ட்டை = சிறிய‌ துண்டு
    இஞ்சி பூண்டு பேஸ்ட் = கால் தேக்கரண்டி
    கொத்து மல்லி தழை = சிறிது (கடைசியில் மேலே தூவ)

    செய்முறை

    1 இடியாப்பத்தில் லேசாக பால் (அ) தண்ணீர் தெளித்து உதிர்த்து கொள்ளவும்.
    வெங்காயம் பச்ச மிளகாயை பொடியாக நருக்கிக்கொள்ளவும்.
  1. முட்டையில் மிளகு தூள்,உப்பு தூள் கால் தேக்கரண்டி,இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு அடித்து வைக்கவும்.
  2. வாயகன்ற வானலியை காயவைத்து, அதில் எண்ணையை ஊற்றி பட்டை சேர்த்து வெடிக்கவிடவும்.அடுத்து வெங்காய‌ம், ப‌ச்ச‌மிள‌காய் சேர்த்து வ‌த‌க்க‌வும்.ரொம்ப‌ சிவ‌ற‌ விட‌ கூடாது க‌ண்ணாடி போல் இருக்கும் போதே க‌ல‌க்கி வைத்துள்ள் முட்டையை ப‌ர‌வ‌லாக‌ வைத்து அடுப்பின் தீயின் அள‌வை ந‌ன்கு குறைத்து வைத்து வேக‌விட‌வும்.
  3. ஒரு ப‌க்க‌ம் வெந்த‌தும் தோசை பிர‌ட்டுவ‌து போல் பிர‌ட்டி ம‌றுப‌க்க‌த்தையும் வேக‌ விட‌வும்.உதிர்த்து வைத்துள்ள‌ இடியாப்ப‌த்தை சேர்த்து கிள‌ற‌வும்.
  4. முட்டை ரொம்ப‌ தூளாகாம‌ல் மெதுவாக‌ கிள‌ற‌வும்.க‌டைசியாக‌ நெய் ச‌ர்க்க‌ரை தூவி இர‌க்க‌வும்.

கொத்துமல்லி தழை தூவி பரிமாறவும்.

குறிப்பு


கார‌ம் அதிக‌ம் என்று நினைப்ப‌வ‌ர்க‌ள் ப‌ச்ச‌மிளகாயின் அள‌வை குறைத்து கொள்ள‌வும்.அல்ல‌து ப‌ச்ச‌மிள‌காயில் உள்ளே இருக்கும் விதைக‌ளை நீக்கி விட்டு அரிந்து சேர்க்க‌வும்.
இது பூப்பெய்திய‌ பெண்க‌ளுக்கு, பிள்ளை பெற்ற‌வ‌ர்க‌ளுக்கு அடிக்க‌டி செய்து கொடுக்க‌லாம். இடுப்புவ‌லி உள்ள‌வ‌ர்க‌ள் சுட‌ சுட‌ இடியாப்ப‌த்தில் தேங்காய் பால் சேர்த்து (தேவைபட்டால் சர்க்கரையும்) சாப்பிட்டால் வ‌லி குண‌மாகும்.
வ‌ய‌தான‌வ‌ர்க‌ளுக்கும் ரொம்ப‌ பிடிக்கும்
.

1 கருத்துகள்:

Ameena said...

ஹலோ ஜலீலாக்க,
என் பேர் ஆமினா.சவுதியில் இருக்கிறேன்.
உங்க டிப்ஸ் ரொம்ப சூப்பர்.

நான் சவுதீயில் கிடைக்கும் அரிசி மாவை வைத்து சுடு தண்ணி ஊற்றி குலைத்து பிழிந்து பார்க்கிறேன். ஆனால் மாவு வரமாட்டேங்குது. மாவை வறுக்கனுமா? உதவுங்க அக்கா ப்ளீஸ் !!!

‍‍இப்படிக்கு,
ஆமினா

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா