Sunday, April 12, 2009

பெண்களுக்கு ஏற்படும் தீராத வயிற்று வலிக்கு

1. பெண்களுக்கு ஏற்படும் தீராத வயிற்று வலிக்கு இரண்டு ஸ்பூன் கசகசாவை மென்று சாப்பிடவும். இது வாய் புண்ணுக்கு கூட கேட்கும். கீழே உள்ள இரண்டும்


2. மாத விலக்கு சமயத்தில் வரும் வயிற்று வலிக்கு வெற்றிலையில் கல் உப்பு,இஞ்சி ஒரு சிறு துண்டு வைத்து ஒரு நாளைக்கு ஒரு தடவை வீதம் முன்று நாட்களுக்கு சாப்பிடவும். சமீபத்தில் கேள்வி பட்டது. இது ஒருவர் இருபத்தைந்து வருடமாக செய்து வருகிறார்கள். பலன் உண்டு

3. அந்த நேரத்திற்கு ஒரு வாரம் முன்பு வெந்தயத்தை மாத்திரை போல் போட்டும் தண்ணீர் குடிக்கலாம்.

4. சுக்கு , சோம்பு, வெல்லம் கலந்தும் சாப்பிடலாம்.

5. வெந்தயத்தை இரவே ஊறவைத்தும் காலையில் அந்த தண்ணீரை குடிக்கலாம்.

இது குளிர் காலத்தில் குடிக்க கூடாது அதற்கு பதில் வெந்தயத்தை வருத்து பொடிசெய்து வைத்து கொள்ள வேண்டும்.
அதை தினம் உணவில் ரசம், புளி குழம்பு போன்றவற்றில் சேர்த்து செய்து கொள்ளலாம்.

0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா